News April 25, 2024

KKR அணியில் இருந்ததை எண்ணி வருந்திய குல்தீப்

image

2016 – 2020 வரை KKR அணிக்காக விளையாடியதை நினைத்து தான் தற்போது வருந்துவதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொல்கத்தா அணியில் ஆடிய காலத்தில் எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. ஆனால், அறிவுரைக் கூறத்தான் ஆளில்லை. தோனிக்கு பிறகு யாருமே என்னை வழிநடத்தவில்லை. அப்போது எனக்கு ஆதரவு வழங்காமல் மோசமாக நடத்தி, KKR அணி கழற்றிவிட்டதாகக் கூறினார்.

Similar News

News August 23, 2025

அமித் ஷாவுடன் CP ராதாகிருஷ்ணன் சந்திப்பு

image

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் CP ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இது பற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, CP ராதாகிருஷ்ணன் அனுபவமிக்க தலைவர் எனவும் நிர்வாகத் திறன் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். சிபிஆர் தேச நலனுக்காக அளப்பரிய தொண்டாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

News August 23, 2025

TVK மீது பாயும் விமர்சனங்கள்.. React செய்த விஜய்

image

தவெகவின் மதுரை மாநாட்டுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அளவு பேரன்பு காட்டும் நபர்களை உறவுகளாக பெற என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை என பதிவிட்ட அவர், தவெக மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம் எனவும் அல்லவையை புறந்தள்ளி புன்னகைப்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.

News August 23, 2025

குப்பையையும் விட்டுவைக்காத திமுக அரசு: EPS

image

நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதலிடம் தமிழ்நாடு என்ற சாதனையை CM ஸ்டாலின் படைத்துள்ளதாக EPS சாடியுள்ளார். திருவெறும்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுகவின் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வழங்கப்படுகிறது என்றார். மேலும், திமுக ஆட்சியில் DGP முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து நியமனங்களிலும் ஊழல் நடப்பதாகவும், குப்பைக்கு கூட வரி போட்டு மக்களின் பணம் சுரண்டப்படுகிறது எனவும் விமர்சித்தார்.

error: Content is protected !!