News April 17, 2025
KTK மூத்த வக்கீல் காலமானார்.. காவிரி வழக்கில் வாதாடியவர்

பிரபல கர்நாடக (KTK ) மூத்த வழக்கறிஞர் ஷரத் ஜாவலி (84) காலமானார். ஹாவேரியை சேர்ந்த அவர், பஞ்சாப் EX ஆளுநர் டி.சி. பாவேட்டின் கொள்ளு பேரன். கர்நாடகாவுக்காக 60 ஆண்டுகள், உச்சநீதிமன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார். அதில் கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இடையேயான காவிரி, கிருஷ்ணா நதிநீர் போன்ற பல்வேறு நதிநீர் விவகார வழக்குகளும் அடங்கும். அவரின் தந்தை ஜாவலியும் வழக்கறிஞர்தான்.
Similar News
News April 19, 2025
கூட்டணி புகைச்சல்: முற்றுப்புள்ளி வைத்த நயினார்

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தது முதலே விமர்சனங்கள் எழுந்தன. அதிலும், ஆட்சியில் பங்கு என அமித் ஷா பேசியதாக வெளியான தகவல் அதிமுக முகாமில் அதிருப்தி தீயை பற்றி எரிய வைத்தது. உடனடியாக, அதை அணைக்க ‘கூட்டணி மட்டுமே’ என ஸ்டேட்மென்ட் விடுத்தார் இபிஎஸ். தற்போது நயினார் நாகேந்திரனும், அமித் ஷா அப்படி பேசவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். இதனால், கூட்டணிக்குள் ஏற்பட்ட புகைச்சல் தற்போது அடங்கியிருக்கிறது.
News April 19, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!

1) அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது <<16145414>>SDPI<<>>; அதிமுக மெல்ல அழியும் எனவும் காட்டம். 2) தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. 3) <<16145613>>டெல்லியில் அடுக்குமாடி<<>> கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி; பலர் மாயமானதால் அச்சம். 4) ஜேஇஇ முதல்நிலை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 5) U-18 ஆசிய தடகளம்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்குத் தங்கம்.
News April 19, 2025
நடிகை குஷ்புவின் ‘X’ அக்கவுண்ட் ஹேக்!

தனது ‘X’ அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது ஐடியை மீட்க யாரேனும் உதவி செய்யுமாறு ‘Please Help Me’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார். குஷ்புவின் ‘X’ அக்கவுண்ட் ஏற்கனவே பலமுறை ஹேக் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.