News March 28, 2024
தேர்தல் ஆணையம் மீது கிருஷ்ணசாமி புகார்

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு சின்னம் ஒதுக்கவில்லை என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். சின்னம் ஒதுக்காததால், இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “2 மாதத்துக்கு முன்பே சின்னம் கேட்டேன். நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக சின்னம் ஒதுக்கவில்லை” என்று தெரிவித்தார்.
Similar News
News December 4, 2025
77 லட்சம் வாக்காளர்களை இழக்கிறதா தமிழகம்?

தமிழகத்தில் நவ.4 முதல் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோர் 25.72 லட்சம், கண்டறிய முடியாதோர் 8.95 லட்சம், நிரந்தர இடமாற்றமானோர் 39.27 லட்சம் என 77.52 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News December 4, 2025
காஸா துயரம்: பிஞ்சு குழந்தைகள் உள்பட 5 பேர் பலி!

போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், காஸாவில் தாக்குதல்கள் தொடர்ந்தே வருகின்றன. சமீபத்திய இஸ்ரேல் தாக்குதலில் 2 பிஞ்சு குழந்தைகள் உள்பட 5 பேர் பலியான நிலையில், 32 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ்-இஸ்ரேலிய படைகளின் மோதலில் 5 இஸ்ரேல் வீரர்களும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு பிறகான தாக்குதல்களில், இதுவரை 360 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 4, 2025
AVM சரவணின் மறைவால் கண்ணீரில் தமிழ் திரையுலகம்

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் AVM சரவணனின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையே கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்துள்ளது. CM ஸ்டாலின் முதல் ரஜினி, சிவகுமார் என அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது இறுதி அஞ்சலியை அவரது பாதங்களில் சமர்ப்பித்து வருகின்றனர். AVM ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


