News March 16, 2024
கிருஷ்ணகிரி: வழிப்பறி, திருட்டு வழக்கில் மூவர் கைது

சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனைத் தடுக்கும் வகையில் ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 15) வேலம்பட்டி வைரக், பட்டக்கப்பட்டி ஜனா, கொள்ளஹள்ளி திவாகர் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 27, 2025
கிருஷ்ணகிரி: ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தோட்டகிரி சாலையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி சுந்தரமூர்த்தி (45). வியாபாரத்தில் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக மனமுடைந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 27, 2025
கிருஷ்ணகிரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கிருஷ்ணகிரி மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News November 27, 2025
கிருஷ்ணகிரியில்: 5 இடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து ராகி நேரடியாக கொள்முதல் செய்ய முதற்கட்டமாக, குப்பச்சிப்பாறை, மதக்கொண்டப்பள்ளி, சாமனப்பள்ளி, பாகலூர் மற்றும் பேரிகை ஆகிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்களில் நாளை (நவ.28) 5 இடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்க உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்தார்.


