News March 16, 2024
கிருஷ்ணகிரி: வழிப்பறி, திருட்டு வழக்கில் மூவர் கைது

சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனைத் தடுக்கும் வகையில் ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 15) வேலம்பட்டி வைரக், பட்டக்கப்பட்டி ஜனா, கொள்ளஹள்ளி திவாகர் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 11, 2025
கிருஷ்ணகிரி: கிராம உதவியாளர் பணி… கடைசி வாய்ப்பு

கிருஷ்ணகிரியில் காலியாக உள்ள 33 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அஞ்செட்டி-08, போச்சம்பள்ளி-15, கிருஷ்ணகிரி-10 இடங்கள் உள்ளன. இப்பதவிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் <
News August 11, 2025
கிருஷ்ணகிரியில் 936 பேர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்ட காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தாண்டில் மொத்தம் 167 கஞ்சா வழக்கில் 187 பேரும், புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக 772 வழக்குகளில் 769 பேர் கைது செய்யப்பட்டும், 7,535 லிட்டா் எரிசாராயமும், 3,013 லிட்டா் வெளிமாநில மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News August 10, 2025
கிருஷ்ணகிரி இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.10) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.