News April 28, 2025
IPL-ல் புது வரலாற்றை எழுதிய கோலி!

IPL-ன் 11 சீசன்களில் 400-க்கும் அதிகமான ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை கிங் கோலி படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை நடந்த 10 போட்டிகளில், 6 அரை சதங்கள் உள்பட 63.29 ஆவரேஜுடன் அவர் 443 ரன்களை எடுத்துள்ளார். சூர்யகுமார் யாதவிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். அதேபோல், ஒரு சீசனில் அதிக ரன்கள் (973) எடுத்த வீரராகவும் அவர் உள்ளார்.
Similar News
News August 14, 2025
ஹிந்தி பயன்பாட்டை அதிகரியுங்கள்: தெற்கு ரயில்வே

நாளை நாட்டின் 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், இன்று முதல் செப்.15 வரை ரயில்வே அலுவலகப் பணிகளில் ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அஞ்சல் வழிச் செய்திகள், ரயில்வே உத்தரவுகள் உள்ளிட்டவற்றை ஹிந்தியில் வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் நோக்கம் என்னவென்பது குறித்த தகவல்கள் இல்லை.
News August 14, 2025
நயினாரிடமே கேளுங்கள்.. கூட்டணியில் குழப்பம்?

பாஜகவுடன் மீண்டும் அதிமுக கைகோர்த்தது முதலே ‘கூட்டணி ஆட்சி’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் இரு கட்சிகளிடையே உரசல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், TTV தினகரனும் EPS-ம் ஒன்றாக மேடையேறுவர் என நயினார் நாகேந்திரன் கூறினார். இது நடக்குமா என்ற கேள்விக்கு, நயினாரிடமே கேளுங்கள் எனக் கூறியுள்ளார் EPS. எனவே, அதிமுக – பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் முற்றுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News August 14, 2025
ரஜினி மீதான வியப்பு குறையவே இல்லை: ஷங்கர்

ரஜினி திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் ஷங்கர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 50 வருடங்களாக ரஜினி மீதான வியப்பு ஒரு நொடியும் குறையாமல் தொடர்வதாகவும், எந்த மனிதரின் நேர்மறை சிந்தனையும் 50 அடி தூரத்தில் பரவும், ஆனால் ரஜினியின் நேர்மறை சிந்தனை உலகையே சூழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘அரங்கம் அதிரட்டும்’ என ‘கூலி’ படத்தையும் வாழ்த்தியுள்ளார்.