News April 12, 2025
சோகத்தில் வாடிப்போன கோலி

சொந்த மண்ணில் டெல்லியிடம் தோல்வி அடைந்தது RCB வீரர்களை ரொம்ப அப்செட் ஆக்கிவிட்டது. குறிப்பாக டிரெஸ்ஸில் ரூமில் அமர்ந்திருந்த விராட் கோலியின் முகத்தை பாருங்கள். சோகத்தை வெளிப்படுத்தும் இந்த போட்டோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரல். நேற்று நடந்த மேட்சில், தன் அதிரடியால் K.L.ராகுல் வெற்றியை பறித்துவிட்டார் என்று சொல்லலாம். நீங்கள் அந்த போட்டியை பார்த்தீர்களா? எப்படி இருந்தது?
Similar News
News December 9, 2025
விஜய் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்

புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோரை போலீசார் சோதனை செய்தபோது, துப்பாக்கியுடன் வந்த நபர் பிடிபட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக கரூர் துயர சம்பவத்தின்போது ‘Y’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
News December 9, 2025
விஜய் புறப்பட்டார்..

புதுச்சேரியில் நடக்கவுள்ள தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டார். உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கவுள்ள இக்கூட்டம் 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் பங்கேற்க 5 ஆயிரம் பேருக்கு QR code உடன் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரூர் சம்பவத்தை அடுத்து 73 நாள்களுக்கு பிறகு இன்று தனது பரப்புரை வாகனத்தில் நின்று விஜய் பிரசாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 9, 2025
வந்தே மாதரம்: PM மோடி Vs பிரியங்கா காந்தி

லோக்சபாவில் <<18503037>>வந்தே மாதரம்<<>> குறித்த விவாதத்தின் போது, முஸ்லிம் லீக்கின் அழுத்தத்தால் பாடலின் சில பாகங்களை நேரு நீக்கியதாக, PM மோடி கூறியிருந்தார். இதை மறுத்து பேசிய பிரியங்கா காந்தி, ‘உண்மையான வரலாற்றை புரிந்து கொள்ளுங்கள். ரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனையின்படியே பாடல் வரிகள் நீக்கப்பட்டன’ என்று குறிப்பிட்டார். மேலும், மே.வங்க தேர்தலை குறிவைத்தே, வந்தே மாதரத்தை விவாத பொருளாக்குவதாகவும் விமர்சித்தார்.


