News May 9, 2024
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கோலி அரை சதம்

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் கோலி அரைசதம் விளாசினார். தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. மறுமுனையில் விக்கெட் சரிந்த போதிலும் தொடக்க ஆட்டக்காரரான கோலி நிலைத்து நின்று, 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்
Similar News
News February 15, 2026
முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அறிவிப்பு

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 1 லட்சம் இலவச வீடுகள் கட்டித்தர ₹3,500 கோடி நிதி ஒதுக்கி TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, ➤பயனாளி வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் ➤சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும் ➤பழைய குடிசை/ஓட்டு வீடுகளில் வசிப்பவராக இருக்க வேண்டும் ➤அரசின் இதர வீட்டு வசதி திட்டங்களில் பயனடைந்திருக்க கூடாது ➤ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News February 15, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹5,000.. புதிதாக சேர்ந்தவர்களுக்கு..

மகளிர் உரிமைத்தொகை ₹5,000 வரவு வைக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு SMS பெற முடியவில்லை என புகார் எழுந்துள்ளது. அதற்கு எளிய தீர்வு உள்ளது. ஒருவேளை நீண்ட நாட்களாக பயன்படுத்தாத வங்கிக் கணக்குகள் கொடுத்திருந்தால், உடனடியாக வங்கிக்கு சென்று சிறு தொகையை டெபாசிட் செய்து கணக்கை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். அதேபோன்று KYC விவரங்களையும் அப்டேட் செய்திருக்க வேண்டியது அவசியம்.
News February 15, 2026
திமுக ₹1 லட்சமே கொடுத்தாலும் ஓட்டு இல்லை: TTV தினகரன்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஓட்டுக்குப் பணம் கொடுத்து வென்றுவிடலாம் என திமுக நினைப்பதாக TTV தினகரன் கூறியுள்ளார். மாதம் ₹1 லட்சம் தருவதாகக் கூறினாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற அவர், வரும் தேர்தலுடன் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றார். மேலும், NDA ஆட்சி அமைந்தவுடன் பழங்குடி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.


