News May 5, 2024
மீண்டும் ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார் கோலி

ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி மீண்டும் கைப்பற்றியுள்ளார். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்புத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் கோலி (542), ருதுராஜ் (509), சாய் சுதர்சன் (424) ஆகியோர் உள்ளனர்.
Similar News
News August 19, 2025
FLASH: நாய் கடிக்கு ஒரே நாளில் 2 பேர் பலியான சோகம்

சென்னை, சேலத்தில் நாய் கடிக்கு அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தனர். சேலம், இலவம்பாளையத்தை சேர்ந்த குப்புசாமி(43) 2 மாதங்களுக்கு முன்பு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டார். அவர் முறையாக சிகிச்சை எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி இன்று உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் சென்னை குமரன்நகரில் தடைசெய்யப்பட்ட Pit Bull நாய் கடித்ததில் கருணாகரன்(55) சற்றுமுன் உயிரிழந்தார். தெருவில் நாய்களிடம் உஷார்!
News August 19, 2025
லிப்ஸ்டிக் போடும் பெண்களே உஷார்..!

பெண்களின் மேக்கப்பில் கண்டிப்பாக இடம்பெறும் லிப்ஸ்டிக்கை, வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. லிப்ஸ்டிக் அட்டையில் ‘PPA Free’ என எழுதியிருந்தால் மட்டுமே வாங்குங்க. இந்த PPA(bisphenol A) இருக்கும் லிப்ஸ்டிக்கை உபயோகித்தால், உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. பொதுவாக அனைத்து லிப்ஸ்டிக்கிலும் இது இருக்காது என்றாலும், கவனமாக இருந்துக்கோங்க!
News August 19, 2025
PM மோடியை சந்தித்த சீன அமைச்சர் வாங் யி

டெல்லியில் PM மோடியை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு எல்லைப் பிரச்னை, வர்த்தகம், கல்விக்கான விசா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா இடையேயான நல்லுறவுக்கு இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.