News February 16, 2025
படிதார் RCB கேப்டன் ஆனதற்கு கோலியே காரணம்: கைஃப்

ரஜத் படிதார் RCB கேப்டன் ஆன பின்னணியில் கோலி இருப்பதாக முன்னாள் வீரர் கைஃப் தெரிவித்துள்ளார். கோலி கேப்டன் ஆகாதது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தவே விராட் கேப்டன் பொறுப்பை மறுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அணியின் எதிர்காலம் கருதியே படிதார் பெயரை அவர் முன்மொழிந்ததாகவும், ஆனால் இது படிதாருக்கு மிகப்பெரிய சவால் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 26, 2025
சார்லஸ் டார்வின் பொன்மொழிகள்

*ஒரு மணிநேரத்தை வீணடிக்க துணிந்த ஒருவன், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன்.
*ஒரு மனிதனின் நட்பு, அவனது மதிப்புக்குரிய சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாகும்.
*ஒரு மொழி என்பது ஒரு உயிரினத்தை போன்றது, அழிந்துபோனால் ஒருபோதும் மீண்டும் தோன்றாது.
*எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவதே மனிதனின் மிக உயர்ந்த பண்பு.
News November 26, 2025
ஜார்ஜ் கோட்டையே இலக்கு: தமிழிசை

நாளை, செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அதற்கு, செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பது எங்கள் இலக்கு அல்ல என்ற அவர், ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதே எங்கள் இலக்கு என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கெனவே தவெகவில் இணையவுள்ள தகவலுக்கு KAS, OPS மறுக்காத நிலையில், தமிழிசையின் இந்த பேச்சும் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
News November 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 531 ▶குறள்: இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. ▶பொருள்: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.


