News February 24, 2025
அசாருதீன் சாதனையை முறியடித்த கோலி

ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (158 கேட்ச்) முதலிடம் பிடித்துள்ளார். பாக்., எதிரான ஆட்டத்தில் 2 கேட்ச் பிடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் அசாருதீன் 156 கேட்ச் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சின் 140, டிராவிட் 124, ரெய்னா 102 கேட்சுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News February 24, 2025
திமுகவுக்கு மக்கள் கெட்-ஆவுட் சொல்வார்கள்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள், போதை கலாசாரம் அதிகரித்துள்ளதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியாக இருக்கும் எனவும், தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் மக்கள் ‘கெட்அவுட்’ சொல்வது நிச்சயம் என்றும் தெரிவித்துள்ளார்.
News February 24, 2025
PAK அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்த கோலி

பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அசத்திய கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் 3 முறைக்கு மேல் ஆட்ட நாயகன் விருது பெறாத நிலையில், கோலி தனிப்பட்ட இந்த சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் சதமடித்த கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
News February 24, 2025
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அறிவிப்பு

அகமதாபாத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாளில் விரிவாக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9ஆம் தேதி கட்சி பிரதிநிதிகள் கூட்டமும் நடைபெறுகிறது. இரண்டு கூட்டங்களுக்கும் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்க உள்ளார். இதில் அரசியல் அமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.