News March 28, 2025
கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க திட்டம்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 500 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. நேற்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
Similar News
News November 24, 2025
சிறுவர்கள் SM பயன்படுத்த தடை: மலேசியா முடிவு

<<18255562>>ஆஸி.,யில்<<>> 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சமூக வலைதளங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை டிச.10 முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இதேபோன்ற தடையை 2026 முதல் கொண்டுவர மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இணைய அச்சுறுத்தல்கள், மோசடிகள், ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதே இதன் முக்கிய குறிக்கோள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்ற தடையை இந்தியாவில் கொண்டு வருவது பற்றி உங்கள் கருத்து?
News November 24, 2025
கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: ராகுல்

<<18375107>>தர்மேந்திராவின் மறைவு<<>> இந்திய கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது இரங்கல் பதிவில், ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக சினிமாவுக்கு தர்மேந்திரா ஆற்றிய இணையற்ற பங்களிப்பு எப்போதும் மரியாதையுடனும், அன்புடனும் நினைவுகூரப்படும் என்று ராகுல் கூறியுள்ளார். இதனிடையே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 24, 2025
‘AK64’ ஆதிக் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்

அஜித்தின் ‘AK64’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். ப்ரீ புரொடக்ஷன் நிறைவடைந்துவிட்டதாகவும், ஷூட்டிங்கிற்கு லொகேஷன் தேடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மிகுந்த பொறுப்போடும், கடமையோடும் படத்தை உருவாக்கும் முனைப்பில் உள்ளதாகவும் அவர் பேசியுள்ளார். இதனால் படத்தின் டைட்டில், cast & crew விவரம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளது.


