News March 28, 2025
கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க திட்டம்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 500 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. நேற்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
Similar News
News November 18, 2025
குரூப் 2 பணியிடங்கள் 1,270-ஆக அதிகரிப்பு

குரூப் 2, 2ஏ காலிபணியிடங்களின் எண்ணிக்கையை 1,270-ஆக அதிகரித்து TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு குறித்து ஜூலை 15-ல் அறிவிப்பு வெளியான போது 645 காலிபணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூடுதலாக 625 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த செப்.28-ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 18, 2025
BREAKING: நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, நவ.10-ல் திறனறி தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெயர், இனிஷியல், படிக்கும் பள்ளி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் இருப்பின், dgedsection@gmail.com இமெயில் மூலம் நவ.20-க்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தேர்வாகும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அரசு மாதந்தோறும் தலா ₹1,500 வழங்க உள்ளது. SHARE IT.
News November 18, 2025
அட்ஜஸ்ட்மெண்ட் குற்றச்சாட்டை மறுத்த தனுஷ் தரப்பு

தனுஷுடன் நடிக்க அட்ஜஸ்ட்மெண்ட் செய்யுமாறு அழுத்தம் தரப்பட்டதாக <<18320110>>நடிகை மான்யா<<>> வைத்த குற்றச்சாட்டை Wunderbar பிலிம்ஸ் மறுத்துள்ளது. இந்த விஷயத்தில் தங்களது பெயரை யாரோ தவறாக பயன்படுத்துவதாக Wunderbar பிலிம்ஸ் மற்றும் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் விளக்கமளித்துள்ளார். அந்நிறுவனத்தின் பெயரில் வரும் Casting Call அழைப்புகள் போலியானது என்றும், 7598756841 மொபைல் எண் தன்னுடையது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.


