News March 28, 2025
கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க திட்டம்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 500 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. நேற்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
Similar News
News December 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை குறித்த மகிழ்ச்சியான அப்டேட் வெளியாகியுள்ளது. புதிதாக இணைந்தவர்களின் விவரம் இந்த வாரம் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிச.15 முதல் அவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்பட உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் வ<<18422492>>ங்கிக் கணக்கு விவரங்களை<<>> அரசு அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். தவறான வங்கிக் கணக்கிற்கு பணம் செல்லக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
News December 1, 2025
நவம்பர் GST வசூல் ₹1.70 லட்சம் கோடி

அக்டோபரில் ₹1.95 லட்சம் கோடியாக வசூலான GST, நவம்பரில் ₹1.70 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. மேலும், CGST கடந்த ஆண்டு நவம்பரோடு ஒப்பிடுகையில், ₹34,141 கோடியில் இருந்து ₹34,843 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், SGST வசூல் ₹43,047 கோடியிலிருந்து ₹42,522 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், IGST வசூல் ₹50,093 கோடியிலிருந்து ₹46,934 கோடியாக குறைந்துள்ளது.
News December 1, 2025
குழந்தைகளிடம் இத கொடுக்கவேண்டாம்.. ப்ளீஸ்!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் பேட்டரி டாய்ஸ் கட்டாயம் இருக்கும். இப்படி நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கித்தரும் பொம்மையால் குழந்தையின் உயிருக்கே பிரச்னை வரலாம். ஆம், பேட்டரி டாய்ஸில் உள்ள பேட்டரிகளை குழந்தைகள் கழற்றி, வாயில் போட்டு விழுங்க வாய்ப்பிருக்கிறது. அது தொண்டையில் சிக்கினால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு நிலைமை சீரியஸாகிவிடும். எனவே இதனை வாங்கித்தர வேண்டாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.


