News March 28, 2025
கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க திட்டம்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 500 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. நேற்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
Similar News
News November 7, 2025
நடிகர் ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ED சம்மன்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து கடந்த மாதம் 28-ம் தேதி ED அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை. மேலும் வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 11-ம் தேதி ED அலுவலகத்தில் ஆஜராக மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
News November 7, 2025
அதிமுகவிலிருந்து யாருனாலும் போகட்டும்: வைகைச்செல்வன்

அதிமுகவிலிருந்து செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டது குறித்து வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து யார் வேண்டுமானாலும் போகட்டும், கவலை இல்லை என்ற அவர், எஃகு கோட்டையாக விளங்கும் அதிமுகவில் இருந்து 2 பேர் விலகினால் எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலைகள் துளிர்க்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News November 7, 2025
தமிழக அரசின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்து வருவதாக தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அக்.31-ம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81% ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், கடந்த 3 மாதங்களுக்குள் 95% மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


