News September 12, 2024
சட்டம் அறிவோம்: BNS பிரிவு 281 என்ன சொல்கிறது?

மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், வாகனத்தை அவசரமாக அல்லது அஜாக்கிரதையாக பொதுவழியில் ஓட்டுவதும் சவாரி செய்வதும் BNS சட்டப் பிரிவு 281இன் படி குற்றமாகும். இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாதம் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத்தண்டனை அல்லது ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Similar News
News April 24, 2025
காய்கறிகள் விலை கடும் சரிவு!

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு சராசரியாக ₹5 வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உருளைக்கிழங்கு – ₹25, தக்காளி – ₹15, கேரட் – ₹25, பீட்ரூட் – ₹10, பெரிய வெங்காயம் – ₹18, இஞ்சி – ₹60, முள்ளங்கி – ₹12, சின்ன வெங்காயம் – ₹40 , கத்திரிக்காய் – ₹20, முருங்கை – ₹70க்கு விற்பனையாகிறது.
News April 24, 2025
பஹல்காம் விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என கார்கே தெரிவித்துள்ளார். இது இந்தியா மீதான தாக்குதல், இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இது அரசியல் செய்ய வேண்டிய நேரமில்லை, காங்கிரஸ் இதில் அரசியல் செய்யாது, தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து சக்தியையும் மோடி அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
News April 24, 2025
₹10 லட்சத்திற்கு அதிகமான பொருள் வாங்கினால் 1% வரி

₹10 லட்சத்திற்கு மேல் விலையுடைய ஆடம்பர பொருள் வாங்கும்போது இனி 1% டிசிஎஸ் (Tax collected at source) வரி விதிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆடம்பர கைப்பை, கைக் கடிகாரங்கள், காலணிகள், ஓவியங்கள் உள்ளிட்டவை வாங்கினால் கூடுதலாக வரி விதிக்கப்படும். இது ஏப்.22 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு முன்பு வாங்கிய பொருள்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.