News August 29, 2024
சட்டம் அறிவோம்: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

இந்தியாவில் கடந்த 1986ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. பொருள்களின் தரம், செயல்பாடு தெரிந்து கொள்வதற்கான உரிமை உள்ளிட்ட 6 உரிமைகளை இந்த சட்டம் வழங்குகிறது. ஒரு குறை எழுந்து 2 ஆண்டுகளுக்குள் புகார் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர் முதலில் எதிர்தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பதில் கிடைக்காவிட்டால் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.
Similar News
News April 26, 2025
அதிகமாக டீ, காபி குடிப்பீங்களா… கவனியுங்க!

‘லைட்டா தலை வலிக்குது.. வா டீ குடிப்போம்’ என சொல்லாத ஆட்களே கம்மிதான். ஒரு நாளைக்கு 3-5 கப் டீ அல்லது காபி குடிப்பது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒரு அபாய எச்சரிக்கையும் கொடுக்கிறார்கள். அதாவது, ஒரு நாளைக்கு 400 மி.கி. அளவுக்கு அதிகமாக caffeine எடுத்துக்கொண்டால், அது நாளடைவில் அமைதியின்மை, தூக்கமின்மையை அதிகரிக்குமாம். நீங்க டெய்லி எத்தனை கப் குடிப்பீங்க?
News April 26, 2025
மாதம் ரூ.1,000 உதவித் தாெகை பெறும் 9.19 லட்சம் மாணவர்கள்

அரசு பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்விகளில் சேரும் மாணவிகளுக்காக புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதன்கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில் எத்தனை மாணவிகள், மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்ற விவரத்தை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் 4,93,689 மாணவிகள், 4,25,346 மாணவர்கள் பயனடைவதாக கூறப்பட்டுள்ளது.
News April 26, 2025
தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் ஜான்வி கபூர்

பாலிவுட் சினிமாவை கலக்கி வரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் விரைவில் கோலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைக்கவுள்ளார். அட்டகத்தி தினேஷை ஹீரோவாக வைத்து பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய படத்தில் ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜான்வியை விரைவில் தமிழ் சினிமாவில் பார்க்கலாம்.