News January 20, 2025
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் திறப்பு

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மே மாதம் திறக்கப்படலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருவோரின் வசதிக்காக, புறநகர் ரயில் சேவையை பேருந்து நிலையத்துடன் இணைக்க ரூ.20 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. 3 நடைமேடை கொண்ட இந்த ரயில் நிலையத்தில், இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால், மே மாதம் ரயில் நிலையம் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
Similar News
News March 5, 2026
கூடுதல் வரியை திரும்ப கொடுங்க.. US அதிபருக்கு ஷாக்!

US அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு வர்த்தக நீதிமன்றம் அதிர்ச்சி அளித்துள்ளது. அவசரகால அதிகார சட்டத்தின் கீழ் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கூடுதல் வரியை திரும்ப வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், சுமார் ₹16 லட்சம் கோடியை திரும்ப அளிக்கும் படி உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த தீர்ப்பு அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
News March 5, 2026
70 தொகுதிகளா? பாஜகவின் பிளானுக்கு EPS பதில்

மொத்தமாக 70 தொகுதிகளை கொடுங்கள், நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துவிடுகிறோம் என்று பியூஷ் கோயல், EPS-யிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாஜகவுக்கு 25 தொகுதிகள், மற்ற கட்சிகளுக்கு தாங்களே சீட் ஒதுக்கீடு செய்வதாக EPS கூறிவிட்டாராம். இதனால் ஏற்பட்ட முரண்பாட்டாலேயே அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், குறைந்தது பாஜகவுக்கு 30 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாம்.
News March 5, 2026
ஏலக்காய் விலை ஒரே நாளில் குறைந்தது

போர் பதற்றத்தால், அரபு நாடுகளுக்கான ஏலக்காய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் 1 கிலோ ஏலக்காய் ₹2,400-லிருந்து ₹2,250 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, இடுக்கி ஏலக்காய் சந்தைக்கு ஒரு நாளில் 1 லட்சம் கிலோ அளவுக்கு வரத்து இருக்கும் நிலையில், கிலோவுக்கு ₹150 வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். வர்த்தகம் ₹1.50 கோடி வரை குறைந்துள்ளதால் ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.


