News March 29, 2024

அரை சதம் விளாசிய கிங் கோலி

image

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி 36 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்தால் RCB தற்போது 12 ஓவர்கள் முடிவில் 104/2 ரன்கள் எடுத்துள்ளது. டு பிளெசிஸ் 8, கேமரூன் கிரீன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கோலி 50, மேக்ஸ்வெல் 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கோலி 77 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 22, 2025

வரலாற்றில் இன்று

image

➤1939 – உ.பி Ex CM முலாயம் சிங் யாதவ் பிறந்த தினம்.
➤ 1956 – 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் தொடங்கியது.
➤1963 – அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
➤ 1995 – உலகின் முதலாவது கணினி அனிமேஷன் படமான டாய் ஸ்டோரி வெளியானது.
➤ 2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

News November 22, 2025

SPORTS 360°: WC மகளிர் கபடியில் இந்தியாவுக்கு 4-வது வெற்றி

image

*ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவிடம் தோல்வியடைந்தது. *மகளிர் உலகக்கோப்பை கபடியில் உகண்டா அணியை வீழ்த்திய இந்தியா 4-வது தொடர் வெற்றியை பெற்றது. *அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் 367 ரன்கள் முன்னிலை பெற்று வங்கதேசம் வலுவான நிலையில் உள்ளது. *ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

News November 22, 2025

மழைக்கு மரியாதை கொடுங்க தம்பி: சீமான்

image

தண்ணீர் மாநாட்டை தொடர்ந்து, கடலம்மா மாநாட்டை நெல்லையில் சீமான் நடத்தினார். இதில் அவர் பேசிக்கொண்டிருந்த போது, மழை பெய்ய தொடங்கியதால், தொண்டர்கள் மழையில் நனையாமல் இருக்க சேர்களை தூக்கிப்பிடித்தனர். இதை கவனித்த சீமான், மழைக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கடா தம்பிகளா என கூறி, சேரினை இறக்க அறிவுறுத்தினார். கடலம்மாவை பேசும் போது மழை வரவில்லை என்றால், பிறகு கடலுக்கு என்ன மரியாதை என்றும் கூறினார்.

error: Content is protected !!