News April 2, 2024

டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டு கொலை

image

டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த பயணி, டிடிஆரை கீழே தள்ளிவிட்டதில் டிடிஆர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 12, 2025

மேலும் 476 அரசியல் கட்சிகளை நீக்கிய EC

image

தேர்தலில் போட்டியிடாத பதிவுசெய்யப்பட்ட 476 கட்சிகளை தேர்தல் ஆணையம்(EC) நீக்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 121 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 44 கட்சிகள் இதில் அடக்கம். நாட்டிலேயே குறைந்த அளவாக அந்தமான், திரிபுரா, சண்டிகரில் தலா ஒரு அரசியல் கட்சி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே 334 கட்சிகளை EC நீக்கியது கவனிக்கத்தக்கது.

News August 12, 2025

பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் மூடல்

image

தமிழகத்தில் சுமார் 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால், அப்பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக நீலகிரியில் 17 பள்ளிகளும், சிவகங்கை 16, திண்டுக்கல் 12, சென்னை, மதுரை, ஈரோட்டில் 10 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல், கோவை, திருப்பூர், விருதுநகர், தி.மலை, குமரி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News August 12, 2025

ரொனால்டோவுக்கு டும் டும் டும்..

image

தனது 8 ஆண்டு காதலியான ஜார்ஜினாவை நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விரைவில் திருமணம் செய்ய உள்ளார். நிச்சயதார்த்த மோதிரத்துடன் ஜார்ஜினா போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். விளையாட்டு வீரர்களில் அதிக வருமானம் ஈட்டும் ரொனால்டோ விரைவில் பிரமாண்டமாக திருமணத்தை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!