News April 14, 2024

கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Similar News

News December 12, 2025

BREAKING: நடிகை ராஜேஸ்வரி காலமானார்

image

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி(39) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 7-ம் தேதி கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள் ஹாஸ்பிடலில் அனுமதித்த நிலையில், 5 நாள்களாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியல்கள் மூலம் ராஜேஸ்வரி தமிழ் மக்களின் மனம் கவர்ந்தார். தற்கொலை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது.

News December 12, 2025

திமுகவின் பலம் எது? மனம் திறந்த உதயநிதி!

image

திருவண்ணாமலை கலைஞர் திடலில் நாளை மறுநாள் திமுக வடக்கு மண்டல இளைஞர் அணி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 1,30,000 இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும்,
CM ஸ்டாலின் சிறப்புரை ஆற்றவிருப்பதாகவும் DCM உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். 75 ஆண்டுகள் கடந்து அரசியலில் பயணிக்கும் திமுகவுக்கு இளைஞரணி பக்கபலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News December 12, 2025

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!

image

தலைப்பே தலைசுற்ற வைக்கிறதல்லவா? 2021-ல் ஹாலிமா சிஸ்ஸே(29) என்ற பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி நாட்டை சேர்ந்த ஹாலிமாவுக்கு, சிஸேரியன் மூலம் பிறந்த 5 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளனர். ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறப்பது, மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் அரிதான விஷயம் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!