News April 14, 2024
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Similar News
News December 27, 2025
விஜய்க்கு அதிர்ச்சி… அஜிதாவுக்கு ICU-வில் சிகிச்சை

தவெகவில் தூத்துக்குடி மா.செ., பொறுப்பு வழங்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட <<18671377>>அஜிதா<<>>, தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. தனியார் ஹாஸ்பிடலில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்றுவந்த அஜிதா, ICU-வுக்கு மாற்றப்பட்டுள்ளார். அஜிதாவின் உடல்நலம் குறித்த செய்தி, தவெகவினர் மற்றும் விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News December 27, 2025
திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார்: சீமான்

சீமான், விஜய் <<18646020>>பாஜக பெற்றெடுத்த<<>> பிள்ளைகள் என திருமாவளவன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ‘என்னையும், தம்பி விஜய்யையும் பாஜக பெற்றபோது, எங்க அண்ணன் திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரு’ என கிண்டலாக சீமான் பதிலடி கொடுத்துள்ளார். நாதக பொதுக்கூட்டத்துக்கு பின் பேசிய அவர், தமிழகத்தின் பிரச்னைகளையும், அதற்கான தீர்வையும் படம் போட்டு காட்டுவேன்; பொறுத்திருந்து பாருங்கள் என்றும் குறிப்பிட்டார்.
News December 27, 2025
வங்கதேசம் தான் எங்கள் நாடு: இந்துக்கள்

நாங்கள் இந்தியாவிற்கு செல்ல மாட்டோம் என வங்கதேச இந்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்துக்கள் என்ற ஒரே காரணத்தால், வலதுசாரி இஸ்லாமியர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்தியாவின் ஏஜெண்டுகள் என முத்திரை குத்துகின்றனர். இந்தியாவிற்கு போகச் சொல்லி எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் வங்கதேச இந்துக்கள். இங்குதான் பிறந்தோம், இங்கு தான் இறப்போம், இதுதான் எங்கள் நாடு என அவர்கள் கூறுகின்றனர்.


