News April 14, 2024

கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Similar News

News December 23, 2025

₹8 கோடி அபேஸ்.. தற்கொலைக்கு முயன்ற Ex IPS!

image

சைபர் மோசடியில் ₹8 கோடி இழந்த பஞ்சாப் Ex IPS அமர் சிங் சஹால், 12 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆன்லைன் மோசடி, அதிக லாபம் என Whatsapp, telegram-ல் மோசடி கும்பல் அவரிடம் இருந்து பணத்தை சுருட்டியுள்ளது. அமர் தற்போது ICU-ல் உள்ளார். IPS அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.

News December 23, 2025

விஜய் உடன் கூட்டணி.. மறைமுகமாக தெரிவித்தார்

image

திமுக, காங்., கூட்டணியில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அதாவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் அங்கமாக (ஆட்சி அதிகாரத்தில் பங்கு) இருக்க வேண்டியது அவசியம் என காங்., மேலிட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தால் விஜய்யுடன் இன்றளவும் <<18646865>>காங்கிரஸ் பேச்சுவார்த்தை<<>> நடத்துவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News December 23, 2025

பாஜகவின் ஆயுதம் CBI, ED: ராகுல் காந்தி

image

எதிர்க்கட்சியினரை குறிவைத்து இந்திய விசாரணை அமைப்புகள் ஏவப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெர்மனியில் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவினர் மீது ஒரு வழக்கு கூட இல்லை என்றும், CBI, ED பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இந்தியாவில் நடப்பது சித்தாந்தப் போர் என்று குறிப்பிட்ட அவர், பாஜகவின் கொள்கைகள் மக்களிடையே சமூக பதற்றத்தை ஏற்படுத்துவதாக சாடினார்.

error: Content is protected !!