News April 14, 2024

கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Similar News

News December 25, 2025

FLASH: நடிகர் விநாயகன் ஹாஸ்பிடலில் அனுமதி

image

‘ஆடு 3’ படத்தின் ஷூட்டிங்கின்போது நிகழ்ந்த விபத்தில் பிரபல வில்லன் நடிகர் விநாயகன் காயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கொச்சியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விநாயகன் விஷாலின் ‘திமிரு’, ரஜினியின் ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லன் ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றார்.

News December 25, 2025

விஜய்யை எதிர்க்க உதயநிதியின் பிளான் இதுவா?

image

விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு தேர்தலில் இளைஞர்களை களமிறக்கும் கட்டாயம் திமுகவுக்கும் வந்துள்ளது. இதனால் இளைஞரணியில் ஆக்டிவாக இருக்கும் 40 பேரை தேர்வு செய்த உதயநிதி, அவர்களை அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டாராம். மீட்டிங் முடிந்தவுடன், அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்து தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய OFFICIAL தகவல் விரைவில் வெளியாகலாம்.

News December 25, 2025

வசீகரமான மார்கழி கோலங்கள்!

image

மார்கழி அதிகாலையில் வீட்டுவாசலில் கோலமிடுவதால், தேவர்கள் மற்றும் ரிஷிகளிடமிருந்து நமக்கு நல்ல ஆற்றலும், ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் தீய சக்திகள் வீட்டினுள் நுழைவது தடுக்கப்படும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், வாசலை அலங்கரிக்கும் சில ஸ்பெஷலான மார்கழி கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை Swipe செய்து பார்த்து, வீட்டு வாசலில் முயற்சிக்கவும்.

error: Content is protected !!