News April 14, 2024
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Similar News
News December 23, 2025
EPS பேச்சை பாஜக மதிக்கவில்லை: CM ஸ்டாலின்

MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, EPS பொய்சொல்லி வருகிறார் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜக அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாள்கள் வேலை தரப்போகிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என வலிக்காமல் EPS கொடுத்த அழுத்தத்தை, பாஜக மதிக்கவில்லை எனவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.
News December 23, 2025
BREAKING: நாடு முழுவதும் பாமாயில் விலை குறைகிறது!

இந்தியாவில் சமையலுக்கு பாமாயில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இச்சூழலில், உலக சந்தையில் பாமாயிலின் விலை கணிசமாக குறைந்துள்ளது. சோயா எண்ணெய்யை விட டன்னுக்கு $100, சூரியகாந்தி எண்ணெய்யை விட டன்னுக்கு $200 குறைவாகவும் உள்ளது. அதேபோல் இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் விளைச்சல் அதிகரித்திருக்கிறது. இதனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவில் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 23, 2025
அதிமுக, பாஜகவின் வியூகம்.. EPS விளக்கம்

2026 தேர்தல் வியூகங்கள் குறித்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன், EPS ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த EPS, தங்கள் கூட்டணி தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற திட்டங்கள் குறித்து முதற்கட்டமாக ஆலோசித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், திமுக ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்புடன் உள்ளதால் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.


