News April 14, 2024

கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Similar News

News November 21, 2025

வண்ணங்களின் களஞ்சியம்.. இன்று சர்வதேச டிவி தினம்

image

இன்று சர்வதேச டிவி தினம் கொண்டாடப்படுகிறது.
வீட்டு ஹாலில் TV வைத்து மாடியில் ஒருவர் ஆன்டெனா திருப்பி கீழே படம் வந்துருச்சா? என கத்தும் குரல்களுக்கு இடையே, அத்திரை மின்னுவது ஒரு மாயாஜாலம். புள்ளியாய் தெரிந்த திரை விலகி, ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியை இமைக்காமல் தெருவே ஒன்று கூடி ரசித்த அந்த தருணங்களால், டிவி ஒரு இயந்திரமாக தெரியவில்லை; அது மகிழ்ச்சியின் சாவியாக இருந்தது. நீங்க டிவி வாங்கிய ஆண்டு?

News November 21, 2025

பட்டாவில் புதிய மாற்றம்.. தமிழக அரசு அறிவித்தது

image

வில்லங்க சான்று(EC) போல, பட்டாவின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ‘பட்டா வரலாறு’ என்ற புதிய சேவையை அடுத்த வாரம் TN அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இதன்மூலம், அந்த நிலத்தின் உரிமையாளர், பட்டா எந்த காலகட்டத்தில் யார் யாருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்களை எளிமையாக அறிய முடியும். <>www.eservices.tn.gov.in<<>> இணையதளத்தில் அடுத்த வாரம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது.

News November 21, 2025

50,000 சிறுவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

image

நல்லது, கெட்டது தெரியாத வயதில் குற்றம் செய்யும் சிறுவர்கள், கூர்நோக்கு இல்லத்தில் பராமரிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கவே தனி சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கூர்நோக்கு நீதி வாரியங்களிலும் மெத்தனம் காட்டப்படுவதால், 50,000 சிறுவர்கள் நீதி கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். நாடு முழுவதும் 362 கூர்நோக்கு இல்லங்களில், 55% வழக்குகள் முடிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!