News August 14, 2024
NCW உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு NCW உறுப்பினரான நிலையில், திடீரென தற்போது பதவி விலகியுள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக NCW தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்புவுக்கு, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. அப்போது உடல்நிலையை காரணம் காட்டி, அவர் பிரசாரம் செய்யவில்லை.
Similar News
News December 3, 2025
இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடையை தவறாமல் கையுடன் எடுத்துச் செல்லுங்க மக்களே!
News December 3, 2025
இப்படியெல்லாம பூச்சிகள் இருக்கிறதா?

ஆச்சரியமான இந்த உலகில் பல்வேறு விசித்திரமான உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பூச்சி இனங்கள், இப்படியெல்லாம் இருக்கின்றதா என்று நம்மை வியப்படைய செய்கின்றன. இந்தப் பூச்சிகள், இயற்கையாகவே இலைகள், பூக்கள், குச்சிகள் போன்ற தோற்றத்தில் உள்ளன. இந்த விசித்திரமான பூச்சிகள் என்னென்னவென்று, மேலா போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
2-வது ODI: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா, தென்னாபிரிக்கா இடையிலான 2-வது ODI ராய்பூரில் இன்று நடைபெறுகிறது. ராஞ்சியில் நடந்த முதல் ODI-ல் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்த இந்தியா, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், தொடரை சமன் செய்வதற்காக தீவிர வலைப்பயிற்சியில் SA வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பேட்டிங்கில் வலுவாக காணப்படும் IND, பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.


