News June 26, 2024

விசாரணை நடத்துகிறார் குஷ்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது . விஷச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கும் 61 பேரில் 6 பெண்களும் அடங்குவர். ஆகையால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் மகளிர் ஆணையம், குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்திருக்கிறது.

Similar News

News November 20, 2025

கடையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்குறீங்களா? ALERT!

image

கடைகளில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் நிறைய எண்ணெய், உப்பு மற்றும் கெமிக்கல்கள் பயன்படுத்தி இருப்பார்கள் என சமையல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதில் இஞ்சி பூண்டுக்கு பதிலாக, மைதா மற்றும் பிற பொருள்களை பயன்படுத்துவார்கள் எனவும் இதனால் ஜீரணம் சார்ந்த பிரச்னைகள், ஃபுட் பாய்சன், அழற்சி போன்ற உடல்நலப் பிரச்னைகள் வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழிப்புணர்வுக்காக SHARE THIS.

News November 20, 2025

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் அதிமுக

image

கேரளாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் 9, 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், இடுக்கி, பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்களைக் களமிறக்க உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 28 வேட்பாளர்களையும் EPS அறிவித்துள்ளார்.

News November 20, 2025

சற்றுமுன்: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் 1 அவுன்ஸ்(28g) $4,000-க்கு கீழ் சென்றது. இதனால், நம்மூர் சந்தையிலும் விலை மளமளவென குறைந்து வந்தது. இதனிடையே, நேற்றும், இன்றும் உயர்வை கண்டுள்ளது. தற்போது $39 உயர்ந்து, $4,105 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால், <<18331084>>நேற்று போலவே,<<>> இன்றும் நம்மூர் சந்தையில் தங்கம் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!