News June 26, 2024

விசாரணை நடத்துகிறார் குஷ்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது . விஷச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கும் 61 பேரில் 6 பெண்களும் அடங்குவர். ஆகையால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் மகளிர் ஆணையம், குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்திருக்கிறது.

Similar News

News November 23, 2025

Cinema Roundup: ரஜினி பிறந்தநாளுக்கு மாஸ் அப்டேட்

image

*பல ஆண்டுகளுக்கு பிறகு, தெலுங்கு படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாக தகவல். *பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்குவதை விட, சொந்தமாக வெப்சீரிஸ், ஒரிஜினல்ஸை தயாரிக்க நெட்ஃபிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாம். *ரஜினி பிறந்தநாளில் ‘ஜெயிலர் 2’ கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். *விமல் நடித்துள்ள ‘மகாசேனா’ படம் வரும் டிசம்பர் 12-ல் வெளியாக உள்ளதாக அறிவிப்பு.

News November 23, 2025

3 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா?

image

கடல் நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவு பற்றாக்குறை போன்ற காலகட்டங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வருடக்கணக்கில் இவை தூங்குகின்றனவாம். இதன் மூலம், அவை உணவில்லாமலும் நீண்ட நாள்கள் வாழ முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 23, 2025

விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி.. முடிவை அறிவித்தார்

image

NDA கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்பதை விஜய் உறுதிப்படுத்தியுள்ளார். கரூர் துயருக்கு பிறகு அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தவெகவின் கொள்கை எதிரி (பாஜக) யார் என்பதை தெளிவாக சொல்லிய பிறகே களத்திற்கு வந்துள்ளதாகவும், அதில் எந்தவித ஊசலாட்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் இன்றைய பேச்சில் BJP-ஐ விஜய் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!