News June 26, 2024

விசாரணை நடத்துகிறார் குஷ்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது . விஷச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கும் 61 பேரில் 6 பெண்களும் அடங்குவர். ஆகையால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் மகளிர் ஆணையம், குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்திருக்கிறது.

Similar News

News November 23, 2025

ஸ்மிருதியின் காதல் வைபோகம் PHOTOS

image

2 நாள்களாக கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் காதல் காட்சிகளே இணையத்தில் வைரலாகியுள்ளது. லவ் ப்ரொபோஸ், நிச்சய அறிவிப்பு, ஹல்தி நிகழ்ச்சி என இருவருக்கும் இடையேயான காதல் பொங்கி வழிய, பதிலுக்கு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இதனிடையே மெஹந்தி நிகழ்ச்சியின் போட்டோஸை சக இந்திய வீராங்கணைகள் பகிர அதுவும் லைக்குகளை குவித்து வருகிறது.

News November 23, 2025

மஞ்சள் கலந்து நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

image

*மஞ்சள் நீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
*அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு மஞ்சள் கலந்த வெந்நீர் குடிப்பது நல்லது என கூறுகின்றனர். *கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது நல்லதாம். *ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த நீர் உதவுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

News November 23, 2025

NATIONAL 360°: துப்பாக்கி வெடித்து காவலர் பலி

image

*ஹரியானாவில் 18 வயது பூர்த்தியாகாத நபர் ஓட்டிய கார் மோதியதில் 8 வயது சிறுவன் பலியான சோகம். *குஜராத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை தேடி வரும் போலீசார். *ஜார்க்கண்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் காவலர் பலி. *மகாராஷ்டிரா DCM அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்.

error: Content is protected !!