News June 26, 2024

விசாரணை நடத்துகிறார் குஷ்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது . விஷச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கும் 61 பேரில் 6 பெண்களும் அடங்குவர். ஆகையால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் மகளிர் ஆணையம், குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்திருக்கிறது.

Similar News

News September 16, 2025

X கணக்கில் CM ஸ்டாலின் செய்த மாற்றம்

image

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற பிரச்சாரத்தை CM ஸ்டாலின் தீவிரமாக முன்னெடுத்துள்ளார். அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவினர் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்திருந்தனர். இந்த நிலையில், CM ஸ்டாலின் X கணக்கில் தனது பெயருடன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என இணைத்துள்ளார். அதேபோல, புரொபைல் போட்டோவிலும் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்பதை சேர்த்துள்ளார்.

News September 16, 2025

நீ ஊருக்கே கிளம்பு: PAK-கிற்கு நோ சொல்லும் ICC?

image

போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை மாற்ற வேண்டும் என்ற PAK கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ICC நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த <<17723508>>IND vs PAK<<>> போட்டியில், டாஸின் போது, இரு கேப்டன்களை கைகொடுக்க விடாமல் செய்ததாகவும், அவரை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என்றும் பாக்., கூறியிருந்தது. ஆனால், இந்த சர்ச்சையில் நடுவர் எந்த பங்கையும் வகிக்கவில்லை என ICC தரப்பு கருதுகிறது.

News September 16, 2025

அக்.1 முதல் கட்டணம் உயர்கிறது

image

ஆதாரில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது. ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்ற வசூலிக்கப்படும் கட்டணம் ₹100ல் இருந்து ₹125-ஆக உயரும் எனவும், மற்ற தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் ₹50ல் இருந்து ₹75-ஆக உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஆதாருக்கு அப்ளை செய்பவர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!