News January 2, 2025
குஷ்பு, அண்ணாமலை பிரச்னை முடிந்தது

கட்சி நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைக்கவில்லை என்ற பிரச்னை கடந்த ஆண்டோடு முடிந்துவிட்டதாக பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அவர், கட்சித் தலைமையின் அழைப்பின் பேரில்தான் அங்கு வந்திருப்பதாகக் கூறினார். இதன் மூலம் அண்ணாமலைக்கும் குஷ்புவுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
Similar News
News December 27, 2025
2025-ல் ஏற்பட்ட கட்டுமான இடிபாடுகள்

பாதுகாப்பு விதிகள், அவசரம் மற்றும் தரமற்ற முறை உள்ளிட்ட பல காரணங்களால் கட்டுமான இடிபாடுகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் பல்வேறு இடங்களில் கட்டுமான இடிபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதில் சில இடிபாடுகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்தாண்டின் கட்டுமான இடிபாடுகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 27, 2025
CM ஸ்டாலினின் சவாலுக்கு பதில் சவால் விடுத்த EPS

<<18676065>>CM ஸ்டாலின்<<>> விடுத்த சவாலுக்கு EPS பதிலளித்துள்ளார். பல ஆண்டுகளாக அவருக்கு, தான் வைத்த ஓபன் சேலஞ்ச் இன்னும் Pending-ல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள EPS, அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே CM ஸ்டாலின் வேலையாக கொண்டுள்ளார் என விமர்சித்துள்ளார். மேலும், நேருக்குநேர் மேடை ஏறி, தனது கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாரா எனவும் சவால் விடுத்துள்ளார்.
News December 27, 2025
மழை மீண்டும் வெளுக்கப் போகுது… வந்தது அலர்ட்

தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்து பனிப்பொழிவு அதிகமாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. அதாவது, நாளை மறுநாள்(டிச.29) தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், டிச.30 முதல் ஜன.2 வரை டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலர்ட்டா இருங்க மக்களே!


