News January 2, 2025
குஷ்பு, அண்ணாமலை பிரச்னை முடிந்தது

கட்சி நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைக்கவில்லை என்ற பிரச்னை கடந்த ஆண்டோடு முடிந்துவிட்டதாக பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அவர், கட்சித் தலைமையின் அழைப்பின் பேரில்தான் அங்கு வந்திருப்பதாகக் கூறினார். இதன் மூலம் அண்ணாமலைக்கும் குஷ்புவுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
Similar News
News December 21, 2025
காரைக்கால் வார சந்தையில் ஆட்சியர் ஆய்வு

காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான திருநள்ளாறு சாலையில் உள்ள சந்தை திடலில் தொடர் கனமழை காரணமாக, சந்தை பகுதி மிகவும் சேரும் சகதியும் காட்சி அளித்தது. காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் சந்தையானது செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் நடைபெறும் வார சந்தையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
News December 21, 2025
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

<<18622770>>தங்கம் விலை<<>> புதிய உச்சத்தை தொட்டு வருவது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தங்கம் விலை குறுகிய காலத்தில் மாபெரும் சரிவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச செட்டில்மெண்ட் வங்கி (BIS) தெரிவித்துள்ளது. எப்போதெல்லாம் அதிக விலையேற்றத்தை தங்கம் சந்திக்கிறதோ, அந்த காலத்தில் மளமளவென விலை சரியுமாம். அதனால், அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் உஷாரா இருங்க. SHARE IT.
News December 21, 2025
வங்கதேசத்தில் விசா மையத்தை மூடிய இந்தியா

இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு தொடர்ந்து மோசமாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால், சிட்டகாங்கில் உள்ள விசா மையத்தை காலவரையின்றி மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, டாக்காவில் உள்ள <<18599347>>விசா மையத்தையும்<<>> இந்தியா தற்காலிகமாக மூடியது.


