News May 23, 2024
கேரளாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் கேரளாவின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 15, 2025
முடிவுக்கு வந்த பாமக பிரச்னை: K.பாலு

பாமகவின் தலைமை, சின்னம் <<17715168>>அன்புமணியின் வசம்<<>> வந்துள்ளதன் மூலம் குழப்பம் தீர்ந்துவிட்டதாக K.பாலு தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில், பாமக வேட்பாளர்களை அன்புமணிதான் அறிவிப்பார் எனவும், A, B படிவங்களில் அவர்தான் கையொப்பமிடுவார் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், ராமதாஸின் வழியை பின்பற்றியே தாங்கள் பயணிப்போம் என்ற அவர், பிரிந்து சென்றவர்கள் தங்களுடன் வரலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 25-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் உள்ளது. அவர்களுக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என உதயநிதி கூறியிருந்தார்.
News September 15, 2025
PHOTOS: கண்களை கவரும் கலர்புல் தெருக்கள்

உலகளவில் மிகவும் வண்ணமயமான, கண்களை கவரும் 10 தெருக்களின் புகைப்படங்களை மேலே வழங்கியுள்ளோம். ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. இதேபோல், நீங்கள் நேரில் பார்த்த கலர்புல் தெரு அல்லது இடங்களை கமெண்ட் பண்ணுங்க. மேலும், இதை உங்க நண்பர்களுக்கு share செய்து, அவர்களையும் கமெண்ட் செய்ய செல்லுங்க.