News August 14, 2024

கெஜ்ரிவால் ஜாமின் மனு: SC இன்று விசாரணை

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு, SC-யில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் ED தொடுத்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு SC கடந்த ஜூலை மாதம் 12இல் இடைக்கால ஜாமின் அளித்தது. எனினும், சிபிஐ தனியே வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தது. இதனால் சிறையில் கெஜ்ரிவால் தொடர்ந்து உள்ளார். இதை எதிர்த்தும், ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.

Similar News

News November 19, 2025

விடுமுறை.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

image

சனி, ஞாயிறு வார விடுமுறையொட்டி சிறப்பு பேருந்துகளை TNSTC அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நவ.21 அன்று 340 பேருந்துகளும், நவ.22 அன்று 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதேபோல், ஈரோடு, திருப்பூர், கோவை, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், இங்கே <>கிளிக்<<>> செய்து முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

News November 19, 2025

3.5 பில்லியன் வாட்ஸ்அப் தரவுகள் ஆபத்தில் உள்ளதா?

image

தரவு கசிவு காரணமாக வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை ஆபத்தில் இருப்பதாக வியன்னா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள பெரிய பாதுகாப்பு குறைபாட்டை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். உலகளவில் 3.5 பில்லியன் பயனர்களின் தொலைபேசி எண் மற்றும் சுயவிவரத் தகவல் கசியும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். மேலும், ஹேக்கிங் செய்யாமலேயே எளிதாக திருடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

News November 19, 2025

PM மோடியிடம் 9 கோரிக்கைகள் வைத்த EPS

image

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை, PM மோடி விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் PM மோடியை வரவேற்ற EPS, அவரிடம் இயற்கை விவசாயத்திற்கான ஆதரவு, பம்ப் செட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட 9 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். மேலும், காகிதப் பொருள் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!