News May 16, 2024
கெஜ்ரிவால் ஜாமினில் வந்ததால் காங்கிரசுக்கு பாதிப்பு

சிறையிலிருந்து கெஜ்ரிவால் வெளியே வந்ததால் காங்கிரசுக்குதான் பாதிப்பு, பாஜகவுக்கு அல்ல என அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலின் பிரசாரம் டெல்லி, பஞ்சாப் தேர்தலில் மட்டுமே எதிரொலிக்கும் எனக் கூறிய அவர், பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அதிகரிப்பதால், அங்கு தனித்து நிற்கும் காங்கிரசுக்கு பாதிப்பு என்றார். அங்கு பாஜகவுக்கு வாய்ப்புகள் குறைவு எனவும் அவர் கூறினார்.
Similar News
News November 27, 2025
சையது முஷ்டாக் அலி கோப்பையில் சாய் சுதர்சன்

அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிகளில், தமிழ்நாடு சீனியர் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று மிகப்பெரிய தோல்வியில் முடிந்த SA-க்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 15 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 14 ரன்களும் மட்டுமே சுதர்சன் எடுத்திருந்தார். இந்நிலையில் தான் அவர் சையது தொடரில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
News November 27, 2025
UNESCO தலைமையகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு

இந்திய அரசியலமைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பாரிஸில் உள்ள UNESCO தலைமையகத்தில் டாக்டர் அம்பேத்கரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று PM மோடி நெகிழ்ந்துள்ளார். அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும், மக்களுக்கு வலிமையையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன என்றும் அவர் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News November 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 532 ▶குறள்: பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. ▶பொருள்: நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.


