News March 22, 2024
கெஜ்ரிவால் மனு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணை, 3 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மனு மீது விசாரணை நடத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி சந்திரசூட் நியமித்தார். அதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 3 நீதிபதிகள் அமர்வு மனுவை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
Similar News
News December 30, 2025
பொங்கல் பரிசுத் தொகை.. புதிய அறிவிப்பு வெளியானது

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த e-KYC-ஐ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், ஜனவரி 1-ம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் நிறுத்தப்படலாம். இதனால் பொங்கல் பரிசும் கிடைக்காது என கூறப்படுகிறது. எனவே ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று, e-KYC சரிபார்ப்பை முடிங்க. SHARE.
News December 30, 2025
நாளையே கடைசி.. பான் கார்டு வேலை செய்யாது!

வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இணைக்கத் தவறினால், புத்தாண்டு முதல் உங்கள் பான் கார்டு செயல்பாட்டை இழந்துவிடும் (inoperative). மேலும், செயலற்ற பான் எண்ணை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, ₹1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உடனே பான் – ஆதாரை இணைத்து விடுங்கள். இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
News December 30, 2025
EPS-க்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

சிறுவர்கள் கையில் கூட போதைப்பொருள் இருப்பதாக <<18703918>>EPS<<>> விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சு., EPS முதல்வராக இருந்தபோது தான் TN-ல் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி, தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளதாக அவர் கூறினார். எங்கேயாவது விற்கப்படுகிறது என்பதை எதிர்க்கட்சியினர் கூறினால், நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


