News March 23, 2025
பஞ்சாப்பில் புது பிளான் போடும் கெஜ்ரிவால்!

டெல்லி MLA தேர்தலில் AAP தோல்வியடைந்த நிலையில், அக்கட்சி ஆட்சி செய்துவரும் பஞ்சாப்பில் கெஜ்ரிவால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அம்மாநில அமைச்சரவையில் வலுவான முகங்களை சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளார். அண்மையில், 2 பஞ்சாப் அமைச்சர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டுடன் டெல்லியில் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளனர். இதனால், அமைச்சரவை மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 25, 2025
₹2,300 கோடி மதிப்பிலான 55 பொருள்களுக்கு வரி குறைப்பு?

₹2,300 கோடி மதிப்பிலான 55 USA இறக்குமதி பொருள்களுக்கான வரியை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் அறிவிப்பின்படி, ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வரும் புதிய USA வரி விதிப்பு முறையால், ₹6,600 கோடி அளவுக்கு இந்திய இறக்குமதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இரு நாட்டு வர்த்தகத்தை சுமூகமாக பேண, இந்த வரி குறைப்பை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
News March 25, 2025
காதலிக்க ரெடி: பாண்டியாவின் முன்னாள் மனைவி

வாழ்க்கை மீண்டும் ஒரு காதல், ரிலேஷன்ஷிப் வாய்ப்பைக் கொடுத்தால், அதை ஏற்க தயாராக இருப்பதாக நடாஷா ஸ்டான்கோவிக் தெரிவித்துள்ளார். சரியான நேரம் வரும் போதுதான் இருவருக்குள்ளான உறவு மலரும் எனவும், வாழ்க்கை கொண்டு வருபவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். செர்பியன் மாடலான நடாஷா, ஹர்திக் பாண்டியாவை கடந்த 2020ல் திருமணம் செய்த நிலையில், 2024ல் இருவரும் பிரிந்தனர்.
News March 25, 2025
BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்

தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதன்படி, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. மேலும், நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.