News March 23, 2025

கொழும்புவின் அழகில் மெய்மறந்த கீர்த்தி சுரேஷ்

image

நடிகை கீர்த்தி சுரேஷ், அண்மையில் இலங்கை சென்றிருந்தார். அப்போது கொழும்பு நகரின் அழகை ரசித்து, அதைப் பற்றி தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்த அவரை, அங்குள்ள ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அவர் கொழும்பில் ஆட்டோவிலும் பயணித்து என்ஜாய் பண்ணியுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பிய கீர்த்தி, கொழும்புக்கு மீண்டும் எப்போது செல்வோம் என காத்திருப்பதாக கூறியுள்ளார்.

Similar News

News November 28, 2025

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

image

கடந்த 6 மணிநேரத்தில் 13 கிமீ வேகத்தில் ‘டிட்வா’ புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக IMD கூறியுள்ளது. இந்த புயல், நவ.30-ல் வடதமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரம் வழியாக வங்கக்கடல் பகுதியை கடக்கும் என்றும் IMD கணித்துள்ளது. எனவே, அதிகாலை 4 மணி வரை குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். Stay safe

News November 28, 2025

அதுக்குள்ள இத்தன வருஷம் ஆகிடுச்சா யோகிபாபு?

image

நக்கல், நகைச்சுவை, குணச்சித்திரம் என தனக்கு வழங்கப்பட்ட கேரக்டர்களை கச்சிதமாக நடித்து, தனது தனித்துவமான உடல்மொழியால் கொண்டாடப்படுபவர் யோகிபாபு. இவர், திரைத்துறையில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த அவரது திரை பயணத்துக்கு இடையே சமூக சேவைகளும் உள்ளன. யோகிபாபு படங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

News November 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 533 ▶குறள்: பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. ▶பொருள்: மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

error: Content is protected !!