News March 23, 2025
கொழும்புவின் அழகில் மெய்மறந்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், அண்மையில் இலங்கை சென்றிருந்தார். அப்போது கொழும்பு நகரின் அழகை ரசித்து, அதைப் பற்றி தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்த அவரை, அங்குள்ள ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அவர் கொழும்பில் ஆட்டோவிலும் பயணித்து என்ஜாய் பண்ணியுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பிய கீர்த்தி, கொழும்புக்கு மீண்டும் எப்போது செல்வோம் என காத்திருப்பதாக கூறியுள்ளார்.
Similar News
News March 25, 2025
அந்தரங்க வீடியோவை ஷேர் பண்ணலாமா? ஐகோர்ட் தீர்ப்பு

மனைவியுடன் இருந்த அந்தரங்க தருணங்களின் வீடியோக்களை, அவரின் ஒப்புதலின்றி மற்றவர்களுக்கு பகிர கணவனுக்கு எந்த உரிமையும் கிடையாது என அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், கணவன் மீது கிரிமினல் வழக்கு நடத்தவும் அனுமதித்துள்ள ஐகோர்ட், திருமணம் செய்து கொண்டதால் மனைவியின் உரிமையாளராக கணவன் மாறிவிட முடியாது, மனைவியின் தனி உரிமைகளையும் இது எவ்விதத்திலும் பறிக்கவும் முடியாது என்று தீர்ப்பளித்தது.
News March 25, 2025
சம்மரில் கூலிங் வாட்டர் குடிக்கலாமா?

கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரைக் குடிக்க பலரும் விரும்புவர். ஆனால், ஃபிரிட்ஜில் இருந்து நேரடியாக குளிர்ந்த நீரை குடித்தால் உடலில் பிரச்னை ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அடிக்கடி குளிர்ந்த நீரை பருகும்போது செரிமான பிரச்னை, ஜலதோஷம், பல் வலி, தலைவலி உள்ளிட்டவை ஏற்படும் என எச்சரிக்கின்றனர். உடலில் நீரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT.
News March 25, 2025
புதிய வருமான வரி மசோதா மீது எப்போது விவாதம்?

மாத ஊதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய வருமான வரி மசோதா மார்ச் 13ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம், வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.