News March 21, 2024
கவிதாவை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் ₹100 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 28, 2025
கேரளாவில் பதற்றம்… வெடிகுண்டு மிரட்டல்

கேரளாவில் தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், போக்குவரத்துறை ஆணையர் அலுவலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். மே 2-ம் தேதி PM மோடி கேரளா செல்ல உள்ள நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
News April 28, 2025
PM மோடியை விமர்சித்த பாடகி மீது வழக்குப்பதிவு

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் PM மோடியை விமர்சித்த போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘மோடி இப்போது பீகாரில் பஹல்காம் தாக்குதலின் பெயரில் வாக்கு சேகரிப்பார்’ என்று நேஹா கூறியிருந்தார். இந்த வீடியோ பாக். பத்திரிகையாளர்கள் குழு நடத்தும் X ஹேண்டில் வெளியானதை அடுத்து, தேசிய ஒருமைப்பாட்டை குலைப்பதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News April 28, 2025
திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் திட்டம்?

திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வபெருந்தகை முன்னிலையில் அண்மையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாவட்ட தலைவர்கள், திமுகவிடம் 60 தொகுதிகளை கேட்க வேண்டும், துணை முதல்வர் பதவி கேட்க வேண்டும், திமுக தரவில்லையேல் அக்கட்சித் தலைமையிலான கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.