News March 21, 2024
கவிதாவை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் ₹100 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 24, 2025
வாழனும், செமயா வாழனும்: மிருணாள் தாகூர்

தன்னை இகழ்ந்தவர்களுக்கு முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவதே தனி கெத்து தான். அப்படித்தான், தனது அம்மாவை காரில் ஏற்ற மறுத்த உறவுக்காரர்களுக்கு முன், பென்ஸ் கார் வாங்கி, அதில் அம்மாவை அமர வைத்து உலா வந்து கெத்து காட்டியுள்ளார் மிருணாள் தாகூர். உறவினர்கள் தனது அம்மாவை அவமானப்படுத்தியபோது ஏற்பட்ட வைராக்கியமே, தான் கார் வாங்கியதற்கான காரணம் என்றும் அவர் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.
News November 24, 2025
இது தைராய்டு பிரச்னையை சரி செய்யும்

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தைராய்டு பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இதற்கு மருத்துவம் அவசியம் என்றாலும், சரியான உணவுகளை உட்கொள்வதும் பலனளிக்கலாம் என சொல்கிறார்கள். தைராய்டு பிரச்னை குணமாக கடல் பாசி, பச்சை பயிறு, முருங்கை கீரை, தயிர், மஞ்சள், பூசணி விதைகள், பிரேசில் நட்ஸ், முட்டை ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். பலருக்கு உதவும், SHARE THIS.
News November 24, 2025
BREAKING: 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

புயல் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புதிதாக திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


