News April 12, 2025

‘கதக்’ கலைஞர் குமுதினி காலமானார்

image

இந்தியாவின் தலைசிறந்த கதக் நடனக் கலைஞர்களில் ஒருவரான குமுதினி லக்கியா(95), வயது மூப்பு காரணமாக அகமதாபாத்தில் காலமானர். கதக் நடனத்துக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட குமுதினிக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய உயரிய விருதுகளை வழங்கி அரசு கவுரவித்துள்ளது. கதக் நடன வளர்ச்சிக்காக ‘கடம்ப் செண்டர் ஃபார் டான்ஸ்’ அமைப்பையும் அவர் நடத்தி வந்தார்.

Similar News

News December 2, 2025

தேமுதிகவின் இருண்ட காலம் அகன்றுவிட்டது: பிரேமலதா

image

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிகவின் இருண்ட காலம் அகன்றுவிட்டதாகவும், இனி பிரகாசம்தான் எனவும் கூறியுள்ளார். எங்களது தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது தனது ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News December 2, 2025

நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும்

image

நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்திடுங்க மக்களே. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதா?

News December 2, 2025

கன்ட்ரோல் ரூமில் ஷூட்டிங் நடத்தும் CM: EPS

image

டிட்வா புயலால் ராமேஸ்வரமே மூழ்கியபோது, இலங்கைக்கு வேண்டிய உதவிகளை செய்வேன் என CM ஸ்டாலின் வாய்ச் சவடால் அடிப்பதாக EPS விமர்சித்துள்ளார். மழைக்காலத்தில் கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து CM ஷூட்டிங் நடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வெள்ள நீரால் சேதமடைந்த விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!