News April 29, 2025
காஷ்மீர்: கவனம் ஈர்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் மோடி அரசை தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பக்குவமாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களான சசிதரூர், ஓவைசி, உமர் அப்துல்லா ஆகியோர் கவனம் ஈர்த்துள்ளனர். ஆளும் அரசை சாடாமலும், பாகிஸ்தானை கண்டித்தும் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் பாராட்டப்படுகின்றன.
Similar News
News April 29, 2025
செல்வத்தை கொடுக்கும் அட்சய திருதியை குபேர வழிபாடு!

காலை குளித்து, வீட்டில் இருக்கும் லட்சுமி நாராயணன், குபேரனின் படங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகளை சாற்றுங்கள். ஒரு செம்பில் அரிசி, மஞ்சள், சிறிய நகைகளை வைத்து, அருகில் குத்து விளக்கு ஏற்றி வைக்கவும். தேங்காயை மாவிலை கலசம் தயார் செய்து அதன் முன், நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, விளக்கு ஏற்றி, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். நெய்வேத்தியமாக பால் பாயாசம் செய்யலாம்.
News April 29, 2025
இன்ஸ்டாவால் வந்த விபரீதம்.. இளம்பெண் கேங் ரேப்

இன்ஸ்டா நண்பரை பார்க்கச் சென்ற இளம்பெண், கேங் ரேப் செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட், ராஞ்சியை சேர்ந்தவர் விஷ்ணு. இன்ஸ்டா மூலமாக இளம்பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்த அவர், ஆசைவார்த்தைகளை கூறி அருகில் உள்ள மலைக்கு அழைத்து சென்றுள்ளார். நம்பி வந்த பெண்ணை, அங்கு ஏற்கனவே காத்திருந்த நண்பர்களுடன் சேர்ந்து கேங் ரேப் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் மூவரையும் கைது செய்துள்ளது.
News April 29, 2025
மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்ட நடிகர்

கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் சாக்கோ, போதை மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஹைப்ரிட் கஞ்சா பயன்படுத்திய வழக்கில் சில தினங்களுக்கு முன் இவர் கைது செய்யப்பட்டார். இவரோடு, ஸ்ரீநாத் பாசி உட்பட மூன்று திரையுலகினரும் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பெண்ணும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சாக்கோ போதைப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.