News April 29, 2025

காஷ்மீர்: கவனம் ஈர்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள்

image

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் மோடி அரசை தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பக்குவமாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களான சசிதரூர், ஓவைசி, உமர் அப்துல்லா ஆகியோர் கவனம் ஈர்த்துள்ளனர். ஆளும் அரசை சாடாமலும், பாகிஸ்தானை கண்டித்தும் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் பாராட்டப்படுகின்றன.

Similar News

News November 7, 2025

அதிமுகவிலிருந்து யாருனாலும் போகட்டும்: வைகைச்செல்வன்

image

அதிமுகவிலிருந்து செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டது குறித்து வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து யார் வேண்டுமானாலும் போகட்டும், கவலை இல்லை என்ற அவர், எஃகு கோட்டையாக விளங்கும் அதிமுகவில் இருந்து 2 பேர் விலகினால் எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலைகள் துளிர்க்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.

News November 7, 2025

தமிழக அரசின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

image

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்து வருவதாக தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அக்.31-ம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81% ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், கடந்த 3 மாதங்களுக்குள் 95% மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

ராஜினாமா பண்ணலாம்னு இருந்தேன்: சத்யபாமா

image

ஒருங்கிணைப்பு பற்றி பேசியதால்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக Ex MP சத்யபாமா தெரிவித்துள்ளார். தானே ராஜினாமா கடிதம் கொடுக்க இருந்ததாகவும், அதற்குள் EPS கட்சியில் இருந்து நீக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்லது சொன்னால் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாகவும், EPS-ன் இந்த நடவடிக்கைகளுக்கு பயந்து யாரும் கருத்துகளை சொல்வதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!