News October 2, 2025
கரூர் துயரம்.. உதவிகளை அறிவித்தார் விஜய் தொண்டர்

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக சார்பில் உதவி செய்யப்படும் என்று அக்கட்சியின் மரிய வில்சன் அறிவித்துள்ளார். கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈடாக நாம் எதையும் செய்துவிட முடியாது. ஆனால், அவர்களின் கனவுகளை நிறைவேற்ற துணை நிற்க முடியும். அந்த வகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான பள்ளி, கல்லூரி செலவுகளை ஏற்பதாகவும், வேலை வாய்ப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 2, 2025
சற்றுமுன்: கனமழை வெளுத்து வாங்கும்

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால், அடுத்த 3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், நாளை சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், அக்.5-ம் தேதி சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News October 2, 2025
பெண்களுக்கு ₹50,000 தரும் அரசு திட்டம்

உணவு சார்ந்த தொழில்களை தொடங்க விரும்பும் பெண்களுக்கு அன்னபூர்ணா திட்டம் மூலம் கடன் வழங்குகிறது மத்திய அரசு. இத்திட்டத்தின் கீழ் பிசினஸுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், சமையல் பாத்திரங்கள் வாங்க ₹50,000 வரை கடன் பெறலாம். கடனை அடைக்க 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அருகில் இருக்கும் SBI வங்கிக்கு சென்று இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். உங்க வீட்டு பெண்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News October 2, 2025
திருமா திமுகவில் சேர்ந்து விடலாம்: வினோத் பி.செல்வம்

திருமாவளவன் கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் சேர்ந்து விடலாம் என பாஜக மாநிலச் செயலர் வினோத் பி.செல்வம் விமர்சித்துள்ளார். கரூர் துயரத்தில் உயிரிழந்த 15 பேர் பட்டியலின மக்களுக்கு சேர்த்துதான் பாஜக போராடுகிறது எனக் கூறிய அவர், கரூர் சம்பவத்தில் திமுகவுக்கு திருமா முட்டு கொடுப்பதாக விமர்சித்தார். மேலும், கரூர் துயரத்தில் உண்மையை கண்டறியும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் நிற்காது எனவும் தெரிவித்தார்.