News September 30, 2025

கரூர் துயரம்.. வெளிச்சத்துக்கு வந்த புதிய தகவல்

image

கரூர் துயர வழக்கு விசாரணையில் காவலர்கள் பாதுகாப்பு குறைவாக இருந்தது என்றும்; அரசு தரப்பிலேயே தவறு உள்ளதாகவும் தவெக குற்றம் சாட்டியது. விஜய் பிரசார இடத்தில் சாக்கடை குழி சரிவர மூடவில்லை; வெறும் அட்டைகளை கொண்டு மூடியிருந்தனர் என புதிய தகவலை கூறிய தவெக, போலீசாரின் தடியடியால் சாக்கடை கால்வாயில் ஏராளமானோர் விழுந்தனர். அவர்கள் மீது பலர் விழுந்தனர் எனவும் மதுரை ஐகோர்ட்டில் பதிலளித்துள்ளது.

Similar News

News September 30, 2025

அனைத்து உண்மைகளும் வெளிவரும்: விஜய்

image

கரூர் விவகாரத்தில் தங்கள் மேல் எந்த தவறும் இல்லை என விஜய் விளக்கமளித்துள்ளார். மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும், அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அவர், விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் எனக் கூறியுள்ளார். கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து மக்கள் பேசுவது, கடவுளே இறங்கி வந்து சாட்சி சொல்வது போல இருந்ததாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

News September 30, 2025

சற்றுமுன்: விஜய் அவசர ஆலோசனை

image

தவெக நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் கைதாகியுள்ள நிலையில், அவர்களை ஜாமினில் வெளியே கொண்டுவர மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக விஜய் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் நீலாங்கரை வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

News September 30, 2025

ஆயுத பூஜைக்கு சாமி கும்பிட உகந்த நேரம் என்ன?

image

செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து, அதற்கு உதவியாக இருக்கும் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை மதிக்கவும், வணங்கவும் கொண்டாடப்படுவதே ஆயுத பூஜை. நவராத்திரி கடைசி நாளான, நாளை அக்டோபர் 1-ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை என்பதால், காலை 9 மணிக்கு மேல் மதியம் 12 மணிக்குள் நாளை அம்பாளை வழிபடுவது நல்லது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!