News September 28, 2025

கரூர் துயரம்: கனிமொழி இரங்கல்

image

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனிமொழி MP இரங்கல் தெரிவித்துள்ளார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 36 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், CM போர்க்கால அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் X-ல் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 15, 2026

2 நிமிடங்களில் டிரைவிங் லைசன்சில் நம்பர் மாற்றலாம்

image

➤https://sarathi.parivahan.gov.in/ -க்கு சென்று Online Services & Driving License Related Services ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் ➤பிறகு Other Menu என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Mobile Number Update என காட்டும் ➤அதை க்ளிக் செய்து லைசன்ஸ் தொடர்பான விவரங்களை உள்ளிடுங்கள் ➤புதிய மொபைல் நம்பரை Type செய்தால் உடனடியாக அப்டேட் ஆகிவிடும். SHARE பண்ணுங்க.

News January 15, 2026

NIA-க்கு புதிய தலைவர் நியமனம்!

image

NIA-ன் தலைவராக மூத்த IPS அதிகாரி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 1994 இமாச்சல பிரதேச கேடர் IPS அதிகாரியான இவர், கடந்த ஆண்டு டிசம்பரில் NIA-ன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது, முழுநேர தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவர் பணி ஓய்வுபெறும் ஆக.31, 2028 வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News January 15, 2026

கனவில் கேட்ட ஆண்டாள்.. 45 சவரனை கொடுத்த பெண்!

image

நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை தரிசித்தவர்கள், ‘நகைகள் புதுசா இருக்கே’ என கவனித்திருக்கலாம். இதற்கு ஒரு பெண்ணின் பக்தியே காரணம். சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் தோன்றி ஆண்டாள், ‘உன் நகைகளை தா’ என கேட்டாராம். கொஞ்சமும் யோசிக்காத ஜோதிலட்சுமி 45 சவரன் நகைகளை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்க, அதை கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அந்த நகைகளை அணிந்தபடி, ஆண்டாள் உற்சவத்திற்கு புறப்பட்டுள்ளார்.

error: Content is protected !!