News October 25, 2025
கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய அரசு நிதி

கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, மத்திய அரசு தரப்பில் ₹2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களின் வங்கி கணக்கில் ₹2 லட்சத்தை மத்திய அரசு செலுத்தியுள்ளது. ஏற்கெனவே TN அரசு ₹10 லட்சமும், விஜய் ₹20 லட்சமும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 25, 2025
CM வேட்பாளர் நிதிஷ்குமார்: அறிவித்தார் மோடி

பிஹார் சட்டசபை தேர்தலில் INDIA கூட்டணி தேஜஸ்வி யாதவை CM வேட்பாளராக அறிவித்தது. தொடர்ந்து, NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார் PM மோடி. நேற்று பிஹாரில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நிதிஷ்குமார் தலைமையில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார்.
News October 25, 2025
அரையாண்டு விடுமுறை.. தற்போது வெளியான அப்டேட்

அரையாண்டு, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிச.15 முதல் 23 வரை நடைபெறுகிறது. டிச.24 – ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை வருகிறது. அதேபோல், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிச.25-ம் தேதி விடுமுறையாகும். இதனால், விடுமுறைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
News October 25, 2025
ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி வழங்குக

பள்ளி ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக CM ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால், இதுகுறித்து ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வார் என்றும் விரைவில் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


