News October 12, 2025
கரூர் துயரம்: பணத்துக்காக CBI விசாரணையா?

கரூர் துயரில் உயிரிழந்த 10 வயது சிறுவனின் தந்தை CBI விசாரணை கோரி SC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால், குழந்தை பிறந்த ஒரே ஆண்டில் தன்னை விட்டுச் சென்ற கணவர், பணத்திற்காகவே வழக்கு போட்டுள்ளதாக, சிறுவனின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மகனின் வயதை கூட 13 என தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறிய அவர், இறுதிச் சடங்கிற்கு கூட வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News October 13, 2025
பிரபல நடிகை காலமானார்… அதிர்ச்சி தகவல்

ஆஸ்கர் வென்ற பிரபல <<17984182>>நடிகை டயான் கீட்டன்<<>>(79) நேற்று காலமானார். இவரின் திடீர் மரணத்துக்கு என்ன காரணம் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. 21 வயதிலேயே ஸ்கின் கேன்சரை சமாளித்து மீண்டவர், 2015-ல் ஸ்குவாமஸ் செல் கேன்சர் பாதிப்பை எதிர்கொண்டு 2 சர்ஜரிகள் செய்துள்ளார். பின் எக்கச்சக்கமாக உணவுகளை சாப்பிடும் புலிமியா என்ற பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். எல்லாவற்றையும் சமாளித்தவர் இப்போது மறைந்துவிட்டார்.
News October 12, 2025
கூட்டணிக்காக விஜய்யிடம் பேசவில்லை: திருநாவுக்கரசர்

அரசியலில் முதல் முறையாக களமிறங்கும் விஜய்க்கு தேர்தல் நேரத்தில் மக்களின் முடிவு பக்குவத்தை ஏற்படுத்தும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தில் விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியது கூட்டணிக்காக அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் அதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
News October 12, 2025
சற்றுமுன்: திமுகவில் இணைந்தனர்

தேர்தலையொட்டி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்க அனைத்து கட்சி நிர்வாகிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரியில் திமுக மா.செ., மதியழகன் MLA முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுக, தவெக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களை திமுக துண்டு போர்த்தி மதியழகன் வரவேற்றார்.