News September 28, 2025
கரூர் கூட்ட நெரிசல்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தவெகவின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, மரணம் விளைவிக்கும் செயல் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும் மதியழகனிடம் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
Similar News
News January 2, 2026
ராணிப்பேட்டை: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
அமித்ஷாவுக்கு அவசர கடிதம் எழுதிய நயினார்

2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் என நயினார் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், TN-ல் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். மேலும், TN-ல் பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தி.மலையில் ஒரே வாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
News January 2, 2026
அதிரடியாக விலை உயரும் பிரிட்ஜ், AC!

புதிய BEE (Bureau of Energy Efficiency) விதிகள் நேற்று (ஜன.1) முதல் அமலுக்கு வந்துள்ளதால் AC, Fridge-களின் விலை 5%–10% வரை உயருகின்றன. புதிய விதிகளால் ஸ்டார் ரேட்டிங் தரம் குறைகிறது. இதனால் புதிய ஸ்டார் ரேட்டிங்கை அடைய உற்பத்தி செலவு உயர்வது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவு போன்றவற்றால் விலை உயருகின்றன. 2025 செப்., GST குறைப்பால் விலை குறைந்த நிலையில், தற்போது உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.


