News March 18, 2024

கரூர்: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்டமங்கலம் ராசம்மாள் கல்வி நிறுவனம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இன்று ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஈச்சர் வேனில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,47,620 பணம் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூஸ் கம்பெனி ஊழியர் பிரகாஷ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News November 22, 2025

கரூரில் CNC Machine operating வேலை!

image

கரூரில் செயல்பட்டு வரும் Tata Coats நிறுவனத்தில் Laser Cutting & CNC Bending Operator பணிக்கு 25 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கு 10th முதல் டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். CNC Machine operating தெரிந்திருந்தால் நல்லது. இப்பணிக்கு 18-30 வயதுடைய, முன் அனுபவம் உள்ளவர்கள் (அ) Fresher வரும் 30ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 22, 2025

கரூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

image

புகலூர், வேலாயுதம்பாளையம் அடுத்த கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் தனது மனைவி தேவகி என்பவரை தனது ஸ்கூட்டியில் பின்னால் அமர வைத்து கொண்டு நேற்று கருப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.

News November 22, 2025

தம்பதியை கம்பியால் தாக்கிய தந்தை, மகன்!

image

கரூர் தெற்கு நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் (62) மற்றும் அவரது மனைவி செல்வி (54) சொத்து பிரச்சனையை காரணமாக ஹரிகிருஷ்ணன் (47) மற்றும் அவரது மகன் கவின் (25) கடந்த 20-அன்று இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கனகராஜ் புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் ஹரிகிருஷ்ணன் மற்றும் கவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!