News September 28, 2025
கரூர் கருப்பூர் ஆகிவிட்டது: வைரமுத்து

தாங்க முடியவில்லை, இரவு என்னால் தூங்க முடியவில்லை. மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ஒவ்வோர் உயிருக்கும் என் அஞ்சலி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரங்கல் எனக் கூறிய அவர், இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வதே நீண்ட துயரத்துக்கு நிவாரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 28, 2025
சற்றுமுன்: நீதிபதி இல்லத்திற்கே சென்ற தவெகவினர்

சென்னையில் உள்ள நீதிபதி தண்டபாணி இல்லத்துக்கு தவெக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவழகன், CTR நிர்மல்குமார் சென்றுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனவும், CCTV ஆதாரங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனவும் முறையீடு செய்துள்ளனர். இதனை நீதிபதி ஏற்கும் பட்சத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது.
News September 28, 2025
TVK விவகாரத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் யார்?

➤2017 – Ex CM ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையத்தில் அங்கம் வகித்தவர் ➤2018 – ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விசாரணை ஆணையத்தை தலைமையேற்றவர் ➤2025- கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
News September 28, 2025
கரூர் துயரம்: நிதியுதவி அறிவித்தார் PM மோடி

கரூர் துயரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு PM மோடி தலா ₹2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காயம் அடைந்தோருக்கு ₹50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் ₹20 லட்சம், தமிழக அரசு ₹10 லட்சம் அறிவித்துள்ள நிலையில் தற்போது PM-ன் ₹2 லட்சம் சேர்த்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹32 லட்சம் நிதியுதவி கிடைக்கும்.