News October 14, 2025

கரூர் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தது SIT

image

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது. அத்துடன், சிபிஐக்கு வழக்கை மாற்றியதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (SIT) இடைக்கால தடைவிதித்தது. இதனால் SIT குழுவினர் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்கள் உடனடியாக சிபிஐ-யிடம் வழங்கப்படும்.

Similar News

News October 15, 2025

தீபாவளி ஸ்பெஷல்: நாய்களுக்கென தனி வழிபாடு

image

நேபாளில் Tihar என்ற பெயரில் 5 நாள்கள் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகையின் 2-வது நாளில் நாய்கள் வழிபாடு நடத்தப்படுகிறது. மனிதர்களுக்கு விசுவாசமாக இருக்கும் நாய்களிடம் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகம் இட்டு வழிபாடு நடத்தப்படுகின்றன. மேலும், இந்த நாளில் நாய்களுக்கு சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகின்றன.

News October 15, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News October 15, 2025

இதில் மறைந்திருக்கும் எண் என்னவென்று தெரிகிறதா?

image

ஒரு குட்டி கேம் விளையாடலாம். மேல் உள்ள புகைப்படத்தில் மறைந்திருக்கும் எண் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்களுக்கு தெரியும் எண்ணை கமெண்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து, அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்கள்.

error: Content is protected !!