News October 13, 2025
கரூர் வழக்கு: சிறப்புக் குழுவுக்கு SC விதித்த கட்டுப்பாடு?

கரூர் வழக்கை CBI விசாரிக்க உத்தரவிட்டுள்ள அதேவேளையில், அதனை கண்காணிக்க ஓய்வு பெற்ற SC நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள 2 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாக இருக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதம் ஒருமுறை விசாரணை அறிக்கையை SC-ல் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, அன்ஜாரியா ஆணையிட்டுள்ளனர்.
Similar News
News December 9, 2025
விஜய் புறப்பட்டார்..

புதுச்சேரியில் நடக்கவுள்ள தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டார். உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கவுள்ள இக்கூட்டம் 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் பங்கேற்க 5 ஆயிரம் பேருக்கு QR code உடன் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரூர் சம்பவத்தை அடுத்து 73 நாள்களுக்கு பிறகு இன்று தனது பரப்புரை வாகனத்தில் நின்று விஜய் பிரசாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 9, 2025
வந்தே மாதரம்: PM மோடி Vs பிரியங்கா காந்தி

லோக்சபாவில் <<18503037>>வந்தே மாதரம்<<>> குறித்த விவாதத்தின் போது, முஸ்லிம் லீக்கின் அழுத்தத்தால் பாடலின் சில பாகங்களை நேரு நீக்கியதாக, PM மோடி கூறியிருந்தார். இதை மறுத்து பேசிய பிரியங்கா காந்தி, ‘உண்மையான வரலாற்றை புரிந்து கொள்ளுங்கள். ரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனையின்படியே பாடல் வரிகள் நீக்கப்பட்டன’ என்று குறிப்பிட்டார். மேலும், மே.வங்க தேர்தலை குறிவைத்தே, வந்தே மாதரத்தை விவாத பொருளாக்குவதாகவும் விமர்சித்தார்.
News December 9, 2025
விபத்தில் சிக்கி பிரபல நடிகர் காயம்

‘இதுதாண்டா போலீஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் ராஜசேகர், ஷூட்டிங்கின்போது விபத்தில் சிக்கியது தாமதமாக தெரியவந்துள்ளது. கடந்த 25-ம் தேதி சண்டைக் காட்சியின்போது, நடந்த விபத்தில் அவரது வலது குதிகாலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 வார ஓய்வுக்குப்பின் அவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.


