News October 24, 2025
கரூர் விவகாரம்: CBI பதிவு செய்த FIR கோர்ட்டில் தாக்கல்

கரூரில் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து அவர்கள் தங்களது விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை வரும் நாட்களில் தீவிரப்படுத்த உள்ளனர்.
Similar News
News October 24, 2025
பிஹார்: 10 தொகுதிகளில் மோதும் காங்.,- RJD

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. கடைசியில், தேஜஸ்வி யாதவ் CM வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், RJD-க்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் மற்றும் VIP கட்சிகளின் 4 வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர். இதனிடையே, 10 தொகுதிகளில் மனுவை வாபஸ் பெறாததால் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
News October 24, 2025
டெஸ்டில் இருந்து விலகியது ஏன்? ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு முதுகுப் பிரச்சினை இருப்பதை தெரிவித்த அவர், அதன் காரணமாக தன்னால் தொடர்ந்து 2 நாள்கள் பீல்டிங் செய்ய முடிவதில்லை என கூறினார். இதனாலேயே டெஸ்டில் ஓய்வு எடுத்துள்ளதாக கூறிய அவர், ஆனால் ODI-ல் ஒரு நாள் பீல்டிங் செய்த பிறகு, மீண்டுவர நேரம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
News October 24, 2025
ரஷ்யா யாருக்கும் அஞ்சாது: புதின்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க, US அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் இரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால் இந்த தடைகளுக்கெல்லாம் ரஷ்யா ஒருபோதும் அஞ்சாது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்த தடைகள் ரஷ்ய பொருளாதாரத்தை பாதிக்காது என்று கூறியுள்ள அவர், எந்தவொரு அழுத்தத்திற்கும் ரஷ்ய அடிபணிய போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


