News April 1, 2024
கச்சத்தீவு ஒப்படைப்பு குறித்து கருணாநிதிக்கு தெரியும் (1)

கச்சத்தீவு விவகாரம் குறித்து ஆர்டிஐ மூலம் அண்ணாமலை பெற்ற மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 1974ஆண்டில் ஜூன் 19இல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வெளியுறவு செயலர் கேவால் சிங் சந்தித்து, கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு விட்டு கொடுக்கும் ஒப்பந்தம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது தனது ஒப்புதலை கருணாநிதி தெரிவித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 31, 2026
BREAKING: சென்னையில் விஜய் மீது பாய்ந்தது வழக்கு!

தவெக தலைவர் விஜய் நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், 300 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 5000 பேர் கூடியதாகவும், 5 ஒலிபெருக்கிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 31 ஒலிபெருக்கி பயன்படுத்தியதாக வழக்கு.
News March 31, 2026
மது குடிப்போர் வாக்கு எனக்கு வேண்டாம்: சீமான்

மது குடிப்போர் வாக்கு தனக்கு வேண்டாம். நல்ல குடிமக்கள் வாக்கு மட்டும் போதும் என சீமான் பேசியுள்ளார். டாஸ்மாக் வருமானம் ₹50,000 கோடி மூலம் திமுக ஆட்சி நடத்துவதாக கூறிய அவர், மது பழக்கத்தால் தமிழ் மக்கள் உழைக்கும் திறனற்றவர்களாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தான் திமுக போல திருட்டு நிதியில் கட்சி நடத்தவில்லை; மக்களிடம் திரள் நிதி வாங்கி கட்சி நடத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.
News March 31, 2026
FLASH: கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

TN-ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களை ஒட்டிய கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இது தொடர்பாக IMD விடுத்துள்ள அறிவிப்பில், மேற்கு விதர்பா முதல் TN வரை காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. அதேபோல், குமரிக்கடல் முதல் வடக்கு உள் கர்நாடகா வரை மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNRains<<>>


