News March 1, 2025
சதம் விளாசிய கருண் நாயர்

ரஞ்சி டிராஃபி கிரிக்கெட் தொடரில் விதர்பா அணி வீரர் கருண் நாயர், சதம் விளாசி அசத்தியுள்ளார். கேரளாவுக்கு எதிரான போட்டியின் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய அவர், 132 (280) ரன் குவித்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயர், இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 86 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக அவர் ரன் அவுட்டானார்.
Similar News
News March 1, 2025
சனிப் பெயர்ச்சி: ஏழரை சனியில் சிக்கப்போகும் ராசிகள்

2025 சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியில் சிக்கப் போகும் ராசிகள், மீளப் போகும் ராசிகள் குறித்து ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதை பார்க்கலாம். *மீன ராசி – ஜென்ம சனி (சனியின் உக்கிரமான பகுதி) *கும்ப ராசி – பாத சனி (சனியின் கடைசி பகுதி) *மேஷ ராசி – விரய சனி (ஏழரை சனி தொடக்கம்) *சிம்ம ராசி – அஷ்டம சனி *மகர ராசி – ஏழரை சனியிலிருந்து விடுபடல் *கடக ராசி – அஷ்டம சனியிலிருந்து விடுபடல்.
News March 1, 2025
5 பேர் கொலை வழக்கு: கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

கேரளாவில் 5 பேரை கொன்ற இளைஞர் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது. ரூ.65 லட்சம் கடன் இருந்ததால், முதலில் தாய், சகோதரருடன் தற்கொலை செய்ய இருந்ததாகவும், தாய் சம்மதிக்காததால் அவரையும், சகோதரரையும் கொலை செய்ய முயன்றதாகவும், இதில் சகோதரர் மட்டும் இறந்ததாகவும், பின்னர் தாம் இல்லாமல் காதலி இருக்க மாட்டார் என கூறி, அவரையும், அலட்சியம் செய்த பாட்டி உள்ளிட்ட 3 உறவினர்களையும் கொன்றதாக கூறியுள்ளார்.
News March 1, 2025
ஆஹா… இப்படி ஒரு ஒற்றுமையா?

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 4 அணிகளுக்குள்ளும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால், 2023இல் நடைபெற்ற ODI உலகக் கோப்பை தொடரில், மேற்கண்ட அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. தற்போதும் அதேபோல அமைந்துள்ளதால், எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.