News June 16, 2024
தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் திறக்க வேண்டும்

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகம் வழங்க வேண்டிய 99 டி.எம்.சி.யை நிலுவையில் வைத்துள்ளதால், குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தமிழக அரசு காவிரியில் இருந்து நீரை பெறுவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Similar News
News March 31, 2026
விமான எரிபொருள் வரியை குறைக்க வலியுறுத்தல்

மேற்காசிய போர் காரணமாக விமான எரிபொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில், விமான எரிபொருள் மீதான VAT வரியை மாநில அரசுகள் குறைக்குமாறு விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் VAT வரி 25%, மகாராஷ்டிராவில் 18% & தமிழகத்தில் 29% ஆக உள்ளது. இவற்றை குறைத்தால், விமான டிக்கெட்டுகள் மீதான விலையேற்றம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 31, 2026
நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது

இன்று நள்ளிரவு (ஏப்.1) முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. கப்பலூர், நாங்குநேரி, வானகரம், தேனி, பரனூர் உள்ளிட்ட தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 68 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சுமார் 3% – 5% வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என கூறப்படுவதால், வாகனங்களுக்கேற்ப ₹5 – ₹100 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 31, 2026
விஜய் Vs உதயநிதி… பாதுகாப்பில் பாரபட்சமா?

விஜய்யின் கொளத்தூர் பிரசாரத்தில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பு EC-யிடம் புகார் அளித்துள்ளது. அதற்கு பதிலடியாக திருவண்ணாமலையில் பெரும் கூட்டத்திற்கு நடுவே DCM உதயநிதி பிரசாரம் செய்ததை திமுகவினர் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் இருவரின் பிரசார வாகனங்களின் முன் நிற்கும் போலீசாரின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, இதுதான் சமமான பாதுகாப்பா என தவெகவினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.


