News January 9, 2025
நக்சல்கள் இல்லாத மாநிலம் ஆனது கர்நாடகா

தங்கள் மாநிலத்தில் நக்சல்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக கர்நாடக CM சித்தராமையா அறிவித்துள்ளார். அரசிடம் சரணடைந்த 6 நக்சல்களுக்கு மறுவாழ்வு உதவிகள் அளித்தபோது இதை தெரிவித்தார். நாட்டில் தற்போது சத்தீஸ்கர், ஆந்திரம், ஒடிஷா, மகா., ஜார்கண்ட், கேரளா, ம.பி., தெலங்கானா, மே.வங்கம் ஆகிய 9 மாநிலங்களில் மட்டுமே நக்சல் (Maoist) இயக்கம் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்திலும் நக்சல் செயல்பாடு இல்லை.
Similar News
News January 8, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜன.10 வரை நீட்டித்து TN அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். www.dge.tn.gov.in தளத்தில் டவுன்லோடு செய்யப்படும் விண்ணப்பத்தை நிரப்பி HM வசம் ஒப்படைக்க வேண்டும். SHARE IT
News January 8, 2026
பொங்கலுக்கு முன்… இதை மறந்தும் கூட செய்யாதீங்க

இயற்கை பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருள்கள் தீயிட்டுக் கொளுத்தி நமது முன்னோர்கள் போகியை கொண்டாடினர். ஆனால், தற்போது பழைய பிளாஸ்டிக் பொருள்கள், டயர், டியூப் போன்றவற்றை எரிப்பதால், காற்றுமாசு ஏற்படுவதோடு, மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போகி அன்று பழைய பொருள்களை எரிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அரசு வேண்டுக்கோள் விடுத்துள்ளது.
News January 8, 2026
பள்ளி மாணவன் வெட்டிக் கொலை.. தமிழகத்தில் அதிர்ச்சி

நெல்லை, பணகுடியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் லெட்சுமணன்(15) கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். லெட்சுமணன், தனது எதிர் வீட்டில் உள்ள சபரிராஜன் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சபரிராஜன் அரிவாளை எடுத்து லெட்சுமணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


