News June 11, 2024
கொலை வழக்கில் கன்னட நடிகர் கைது

கர்நாடகாவை சேர்ந்த ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். தர்ஷனுக்கு நெருக்கமான நடிகை பவித்ரா கவுடா குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட ரேணுகா, மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், பின்னர், அது கொலை என்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த வழக்கில் தர்ஷனுடன் சேர்த்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 11, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை சேர்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டிச.15 முதல் அவர்களுக்கும் ₹1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்னும் 4 நாள்களில் (நவ.15) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் முழுவதுமாக நிறைவடையும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்பிறகு, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. அதனால், தகுதியான மகளிர் உடனடியாக முந்துங்க. SHARE IT
News November 11, 2025
பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு… சிறிது நேரத்தில்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 243 தொகுதிகளில், 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணிக்கு இறுதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 6:30 முதல் பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. NDA கூட்டணி ஆட்சி தொடருமா, இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது ஓரளவு இந்த கருத்துக் கணிப்பில் தெரிந்துவிடும். முடிவுகளை அறிய வே2நியூஸில் காத்திருங்கள்.
News November 11, 2025
பிஹாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பிஹாரில் இறுதிக்கட்டமாக இன்று நடைபெற்ற 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஏற்கெனவே முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.


