News June 10, 2024
கங்கனா சொன்னதும் தவறு, அந்த பெண் அறைந்ததும் தவறு

கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்த விவகாரத்தில் இருவர் மீதும் தவறு இருப்பதாக பஞ்சாப் முதல்வர் பகவத் மான் கூறியுள்ளார். டெல்லியில் போராடிய விவசாயிகளை கங்கனா பயங்கரவாதிகள் எனக் கூறியதால், பெண் காவலர் அவரை கோபப்பட்டு அடித்திருக்கலாம். இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாதுதான், இருப்பினும் நடிகையோ, எம்.பி.,யோ விவசாயிகள் போராட்டம் நடத்தினால், அவர்களை பயங்கரவாதிகள் என அழைப்பது தவறு என்றார்.
Similar News
News September 4, 2025
திமுகவை அசைக்க முடியாது: அமித்ஷாவுக்கு வைகோ பதிலடி

திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று சமீபத்தில் அமித்ஷா கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய வைகோ, இமயமலையை கூட அமித்ஷா அசைத்துவிடலாம், ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். எண்ணற்ற பேர் தன் உயிர்களையும், ரத்தத்தையும் சிந்தியுள்ள திமுகவை இவ்வாறு கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.
News September 4, 2025
முதுகு வலியை விரட்டும் ‘பத்ராசனம்’ (மலை போஸ்)

☆கை, கால் தசைகள் வலுவடையும். தண்டுவட பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும்.
➥முதுகு நேராக இருக்கும்படி, நன்கு கால்களை விரித்து நிற்கவும்.
➥முன்னோக்கி உடலை வளைத்து, கைகள் முடிந்தவரை தரையில் பட, கால்களும், முதுகும் நேராகவே இருக்க வேண்டும்.
➥முடிந்தவரை உடலை வளைத்து தரையை தொட முயற்சிக்கவும். ➥இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News September 4, 2025
கவர்ச்சியை ரசிப்பதில் தவறில்லை: ரகுல் ப்ரீத் சிங்

திருமணத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். சொல்லப்போனால், திருமணத்துக்கு பிறகுதான் தனது அழகும் கவர்ச்சியும் அதிகரித்திருப்பதாக பேட்டியில் பேசிய அவர், திருமணம் என்பது நடிகைகளின் வளர்ச்சிக்கோ முன்னேற்றத்துக்கோ தடை போடாது என்றார். அத்துடன் கவர்ச்சியை ரசிப்பதில் தவறில்லை என்ற அவர், வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.