News May 4, 2024
கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் அரசியல்

தொடர்ச்சியாக வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகளைப் பதிவிட்டதாக, நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் முடக்கப்பட்டது. பிறகு, கடந்த ஆண்டு அவரது கணக்கு பயன்பாட்டுக்கு வந்தது. தீவிர பாஜக ஆதரவாளராக இருந்த அவருக்கு, எம்பி சீட் வழங்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், அவர் மண்டி தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்திருப்பதால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
Similar News
News November 17, 2025
தேஜஸ்வியின் அறிவு மங்கிப்போனது: தேஜ் பிரதாப்

தனது சகோதரி ரோஹிணியை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது என லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் குரல் எழுப்பியுள்ளார். தனக்கு நடந்ததை கூட பொறுத்துக்கொள்வேன் என கூறிய அவர், தனது சகோதரிக்கு நடந்ததை எந்தவொரு சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரோஹிணியை நோக்கி <<18303650>>செருப்பை<<>> காட்டியது தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியதாகவும், தேஜஸ்வியின் அறிவு மங்கிப்போய்விட்டது எனவும் சாடியுள்ளார்.
News November 17, 2025
PTR-ஐ எதிர்த்து போட்டியிடுகிறாரா பிரேமலதா?

யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் தேதிமுக சஸ்பென்ஸாக வைத்து இருக்கிறது. இந்த நிலையில், அமைச்சர் PTR-ன் மதுரை மத்திய தொகுதியில் பிரேமலதா போட்டியிட வேண்டும் என்று மதுரை தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை விஜயகாந்தின் சொந்த ஊர்; இதனால், அங்கு பிரேமலதா களமிறங்கினால் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 17, 2025
சியா விதைகளை இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

சியா விதைகளை ஊற வைக்காமல் அப்படியே வாயில் போட்டுவிட்டு, பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது. இப்படி செய்வதால், அந்த விதைகள் உங்கள் தொண்டையில் சிக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தும். பிறகு குடல்களில் அடைப்பை ஏற்படுத்தி பல வயிற்றுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சியா விதைகளை தண்ணீரில் அரை மணி நேரமாவது ஊறவைத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE THIS.


