News August 20, 2025
கார்த்தியை அழைத்து பேசிய கமல்? காரணம் என்ன?

‘கூலி’ முடிந்தவுடன் லோகேஷ் கைதி 2 பண்ணுவதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ரஜினி, கமல் வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும், அதனை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கமல் தனிப்பட்ட முறையில் கார்த்தியை அழைத்து பேசியிருப்பதாகவும், கார்த்தி சம்மதத்துடனே தற்போது லோகேஷ் ‘கைதி 2’ பணிகளை விட்டுவிட்டு ரஜினி கமல் படத்துக்கான பணிகளை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News January 18, 2026
தவெகவில் இணைய திட்டமா? மாணிக்கம் தாகூர் விளக்கம்

திமுக கூட்டணியில் இருந்து காங்.,-ஐ வெளியேற்ற போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததால், மாணிக்கம் தாக்கூர், பிரவீன் சக்ரவர்த்தி கட்சியில் இருந்து விலகப்போவதாக SM-ல் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், அந்த தகவலை எக்ஸ் தளத்தில் டேக் செய்து பதிலளித்துள்ள மாணிக்கம் தாகூர், ‘அல்றசில்ற ITwing கனவு பலிக்காது கண்ணா’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் உண்மையான காங்கிரஸ்காரன் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
10-வது தேர்ச்சி போதும்.. ₹53,330 சம்பளம்!

*ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 18-25 *கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு. மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் *சம்பளம்: ₹24,250 – ₹53,330 வரை *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & மொழித்திறன் தேர்வுகள் *பிப்ரவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News January 18, 2026
கர்ப்பிணிகளுக்கு பாராசிட்டமால் ஆபத்தா?

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் எடுத்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படும் என டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ‘லான்செட்’ இதழ் வெளியிட்ட ஆய்வில், பாராசிட்டமாலுக்கும், ஆட்டிசத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை குணப்படுத்த மாத்திரை எடுக்காமல் தவிர்ப்பதே குழந்தைக்கு ஆபத்தும் எனவும், பாராசிட்டாமல் பாதுகாப்பானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


