News January 23, 2025

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு: சிபிஐ விசாரணை

image

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 19இல் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.

Similar News

News December 3, 2025

இண்டியா கூட்டணியில் இருந்து விலகலா?

image

பிஹார் சீட் ஷேரிங்கில் நடந்த பிரச்னையால் IND கூட்டணியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சா விலக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த JMM நிர்வாகி குணால் சாரங், ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்ததால்தான் பாஜக புரளிகளை கிளப்பிவிடுவதாக விளக்கமளித்துள்ளார். மேலும், ஜார்க்கண்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் JMM எப்போதும் பாஜகவுக்கு அடிபணியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி இரண்டு ஓப்பனர்களையும் இழந்தது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் 14 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடந்த போட்டியில் சதம் அடித்த கோலி, ருதுராஜூடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகிறார். 12 ஓவருக்கு 77/2 என்ற நிலையில் இந்தியா விளையாடி வருகிறது.

News December 3, 2025

வாடகை வீட்டில் இருப்போருக்கு ஹேப்பி நியூஸ்

image

சென்னை போன்ற பெருநகரங்களில் அட்வான்ஸ் தொகையை கேட்டாலே கிறுகிறுக்கும். இந்நிலையில், வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி இனி 2 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுத்தாலே போதுமானது. அதேபோல், குடியேறிய 12 மாதங்களுக்கு பிறகே வாடகையை உயர்த்த வேண்டும். வாடகை வீட்டில் பழுது ஏற்பட்டால், அதனை 30 நாள்களுக்குள் உரிமையாளர் சரி செய்து கொடுக்க வேண்டும். இந்த விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

error: Content is protected !!