News January 23, 2025

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு: சிபிஐ விசாரணை

image

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 19இல் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.

Similar News

News November 22, 2025

தட்டி தூக்கிய தங்க மகள்கள் PHOTOS

image

2025 உலக குத்துச்சண்டை கோப்பை பதக்கப்பட்டியலில், இந்தியா, 9 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது. குறிப்பாக, இறுதிப் போட்டியில், பெண்கள் 7 தங்கப் பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தினர். இந்த சாதனை, நாட்டில் பெண்கள் விளையாட்டு வளர்ச்சிக்கு பெரிய ஊக்கமாக உள்ளது. மேலே தங்கம் வென்ற பெண்கள் யார் என்று போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News November 22, 2025

தாக்குதலுக்கு 2 ஆண்டுகளாக தயாரான தீவிரவாதிகள்

image

<<18342042>>டெல்லி கார் குண்டுவெடிப்பில்<<>> முக்கிய குற்றவாளியான டாக்டர் முசாமில் ஷகீல், NIA விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தயாராகி வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அம்மோனியம் நைட்ரேட் போன்ற குண்டு தயாரிக்கும் பொருள்கள் மற்றும் ரிமோட்களை வாங்கியதாகவும், இதற்காக ₹26 லட்சத்தை திரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

மனிதர்களை விட அதிக நாள்கள் வாழும் உயிரினங்கள்

image

சில விலங்குகளின் ஆயுள்காலம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆழ்கடல் உயிரினங்கள் முதல் ஆமைகள் வரை, மனிதர்களை விட அதிக ஆயுளைக் கொண்டுள்ளன. அவை, என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!