News June 19, 2024

கள்ளக்குறிச்சி: காவலர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

image

கள்ளச்சாராய பலி எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் கவிதா, பாண்டிசெல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, திருக்கோவிலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், SI, எழுத்தாளர், சிறப்பு SI உள்ளிட்ட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News November 15, 2025

சறுக்கலில் இருந்து சாதனைக்கு

image

ராம்விலாஸ் பாஸ்வானின் வாரிசு என்றாலும், 2020 தேர்தலில் பெற்ற படுதோல்வி சிராக் பாஸ்வானின் அரசியலுக்கு முடிவுரை எழுதிவிட்டதாகவே பலரும் கணித்தனர். ஆனால், 2024 எம்பி தேர்தலில் பாஜகவிடம் போராடி 5 தொகுதிகள் வாங்கி, ஐந்திலும் வென்று நான் திரும்ப வந்துட்டேன் என்றார். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலிலும் போராடி தான் 29 தொகுதிகள் பெற்றார். அதில் 19-ல் முன்னிலை பெற்றிருக்கிறது சிராக்கின் LJP(RV) கட்சி.

News November 15, 2025

பிஹாரில் 200+ இடங்களில் NDA வெற்றி

image

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. EC வெளியிட்டுள்ள முடிவுகளின்படி BJP 89, JD(U) 85, LJP (ராம் விலாஸ்) 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. MGB கூட்டணியில் RJD 24, காங்கிரஸ் 6 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஓவைசியின் AIMIM 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை.

News November 15, 2025

நோட்டாவுடன் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் கட்சி

image

முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி(JSP), பிஹாரில் படுதோல்வி அடைந்துள்ளது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட JSP பெரும்பாலான இடங்களில் டெபாஸிட்டை இழந்துள்ளது. அக்கட்சி மொத்தமாக 3.44% வாக்குகளையே பெற்றுள்ளது. அதோடு 68 தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளே JSP-க்கு கிடைத்துள்ளது. அரசியலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லையா?

error: Content is protected !!