News June 19, 2024
கள்ளக்குறிச்சி: காவலர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

கள்ளச்சாராய பலி எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் கவிதா, பாண்டிசெல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, திருக்கோவிலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், SI, எழுத்தாளர், சிறப்பு SI உள்ளிட்ட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 15, 2025
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா?

வாழ்க்கையின் கடைசி நாளே இன்றுதான் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சிகரமாக வாழ வேண்டும். அதற்கு நிறைய பணம் தான் வேண்டும் என்றில்லை. ஏனென்றால், மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. உங்கள் மனதுக்குள்தான் இருக்கிறது. சின்னச் சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள், புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள், மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழ்ந்து பாருங்கள். உங்களுக்கு எது மகிழ்ச்சி?
News September 15, 2025
இந்தி மற்ற மொழிகளின் நண்பன்: அமித்ஷா

இந்தியை மற்ற மொழிகளுக்கு போட்டியாக பார்க்கக்கூடாது என அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தி மற்ற மொழிகளின் எதிரி அல்ல, நண்பன்தான் என்றும் கூறினார். மகாத்மா காந்தி போன்ற தலைவர்களுக்கு தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும், அவர்கள் இந்தியை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News September 15, 2025
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

மகாராஷ்டிராவில் ஒரு பெண், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். புனேவை சேர்ந்த 27 வயது சாஸ்வத், பிரசவ வலி வந்து சதாரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசேரியன் முறையில் 3 பெண் மற்றும் 1 ஆண் என 4 குழந்தைகள் பிறந்தன. இவருக்கு முன்பே இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதுதவிர, ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. மொத்தத்தில் இவர் 3 பிரசவங்களில் 7 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.